மேலும் அறிய

World Poetry Day: மழைத்துளியாய் மெய்... ஆழியாய் பொய் - மாய உலகில் மூழ்கடிக்கும் கவிதை தினம் இன்று...!

அழகு சொட்டும் ஓர் எழுத்து இலக்கிய வடிவமே கவிதை. குடும்பம், உறவு, சமுதாயம், உலகம் என கவிதைக்குப் பாடு பொருட்கள் அதிகம். மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், வலி, பெருமிதம் என கவிதையில் உணர்ச்சிகளும் ஏராளம். 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி- மகாகவி பாரதி. 

அழகு சொட்டும் ஓர் எழுத்து இலக்கிய வடிவமே கவிதை. குடும்பம், உறவு, சமுதாயம், உலகம் என கவிதைக்குப் பாடு பொருட்கள் அதிகம். மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், வலி, பெருமிதம் என கவிதையில் உணர்ச்சிகளும் ஏராளம். 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கவிதை வெளிப்பாடு மூலம் மொழி பன்மைத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும், அழியும் நிலையில் உள்ள மொழிகளின் குரலைக் கேட்கச் செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க கவிதையை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் கற்பிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

ஆரம்பத்தில் ரோமானியக் கவிஞர் விர்ஜில் நினைவாகக் கொண்டாடப்பட்ட கவிதை தினம், யுனெஸ்கோ அறிவிப்புக்குப் பிறகு மார்ச் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் நிறைய நாடுகளில் பாரம்பரியமாக அக்டோபர் மாதத்தில் கவிதை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நுண் உணர்வுகள்

கவிஞர்கள் தோன்றுவதும் மறைவதும் காலம் காலமாகத் தொடர் நிகழ்வாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் படைத்த காவியங்களுக்கு என்றும் அழிவில்லை. மனதின் நுண் உணர்வுகளைக் கலைஞர்கள் வார்த்தைகளின்வழியே கவிதையாக கச்சிதமாய் வடிக்கின்றனர்.  

பாரதியார், பாரதிதாசன் தொடங்கி கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தபூ சங்கர் என கவிஞர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

எதைக் கேட்டாலும்

வெட்கத்தையே பதிலாகத் தருகிறாயே...

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..? என்பார் தபூ சங்கர்.

மழை மட்டுமா அழகு, 
சுடும் வெயில் கூட தான் அழகு. 
மலர் மட்டுமா அழகு, 
விழும் இலை கூட ஒரு அழகு! என உலகின் எல்லா பரிமாணங்களையும் ரசிக்க வைத்தார் நா.முத்துக்குமார்.


மலைகள் மண் மாதாவின் மார்பகங்கள் ...
இவ்வளவு பெரியதா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் 
எவ்வளவு மேகக் குழந்தைகள்?
அத்தனைக்கும் பாலூட்ட வேண்டாமா? என்று கவிதையிலேயே குறும்பைப் புகுத்தினார் வாலி. 

சிந்திக்க வைக்கும் கவிதைகளை எழுதவும் அவர் தவறவில்லை. 

தன் தலையைச் சீவியவனுக்கே 
தண்ணீர் தருகிறது இளநீர் 

*

தன் தோலை உரித்தவனின் கண்களில் 
நீர் வர வைக்கிறது வெங்காயம்! என்றார் வாலி. 

எங்கேயோ திடீரென நாம் வாசிக்க நேரும் கவிதை, நம்மை வருடிச் செல்கிறது. புன்னகைக்க வைக்கிறது. சோகத்தில் ஆழ்த்துகிறது. மறைந்து கிடந்த காயத்தைக் குத்திக் கிளறுகிறது. யாரோ ஒருவரை நம் நியாபகக் கற்றையில் இருந்து மீட்டெடுக்கிறது. பால்யத்துக்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. நேசத்துக்கு உரியவருக்கு, 'என்னை அனுப்பு' என்று சொல்கிறது. 

ஓவியம், புகைப்படம் என கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று கவிதை. மானுட உணர்வுகளின் வடிகாலாய் காலத்துக்கும் அழியாது நிற்கிறது.

கவிதை தினமான இந்த நன்னாளை, கவிதை எழுதியோ, பிடித்த கவிதைகளைப் பகிர்ந்தோ கொண்டாடுவோம்.

*

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !
வைகாசி பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் மோகினி திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள்!
வைகாசி பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் மோகினி திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள்!
காஞ்சிபுரம் டவர் விவகாரம்: என் ஆபீஸ்லேயே டவர் இருக்கு - கலெக்டர் சொன்ன அதிரடி பதில்!
காஞ்சிபுரம் டவர் விவகாரம்: என் ஆபீஸ்லேயே டவர் இருக்கு - கலெக்டர் சொன்ன அதிரடி பதில்!
CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
CM Vijay: 6 மாசம் கேட்டுட்டு... அரை மணி நேரத்துல புலம்பல்.. ஸ்டாலினை பொளந்தெடுத்த முதல்வர் விஜய்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Toyota EBELLA Alternatives: டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget