மேலும் அறிய

World Poetry Day: மழைத்துளியாய் மெய்... ஆழியாய் பொய் - மாய உலகில் மூழ்கடிக்கும் கவிதை தினம் இன்று...!

அழகு சொட்டும் ஓர் எழுத்து இலக்கிய வடிவமே கவிதை. குடும்பம், உறவு, சமுதாயம், உலகம் என கவிதைக்குப் பாடு பொருட்கள் அதிகம். மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், வலி, பெருமிதம் என கவிதையில் உணர்ச்சிகளும் ஏராளம். 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி- மகாகவி பாரதி. 

அழகு சொட்டும் ஓர் எழுத்து இலக்கிய வடிவமே கவிதை. குடும்பம், உறவு, சமுதாயம், உலகம் என கவிதைக்குப் பாடு பொருட்கள் அதிகம். மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், வலி, பெருமிதம் என கவிதையில் உணர்ச்சிகளும் ஏராளம். 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கவிதை வெளிப்பாடு மூலம் மொழி பன்மைத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும், அழியும் நிலையில் உள்ள மொழிகளின் குரலைக் கேட்கச் செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க கவிதையை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் கற்பிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

ஆரம்பத்தில் ரோமானியக் கவிஞர் விர்ஜில் நினைவாகக் கொண்டாடப்பட்ட கவிதை தினம், யுனெஸ்கோ அறிவிப்புக்குப் பிறகு மார்ச் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் நிறைய நாடுகளில் பாரம்பரியமாக அக்டோபர் மாதத்தில் கவிதை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நுண் உணர்வுகள்

கவிஞர்கள் தோன்றுவதும் மறைவதும் காலம் காலமாகத் தொடர் நிகழ்வாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் படைத்த காவியங்களுக்கு என்றும் அழிவில்லை. மனதின் நுண் உணர்வுகளைக் கலைஞர்கள் வார்த்தைகளின்வழியே கவிதையாக கச்சிதமாய் வடிக்கின்றனர்.  

பாரதியார், பாரதிதாசன் தொடங்கி கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தபூ சங்கர் என கவிஞர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

எதைக் கேட்டாலும்

வெட்கத்தையே பதிலாகத் தருகிறாயே...

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..? என்பார் தபூ சங்கர்.

மழை மட்டுமா அழகு, 
சுடும் வெயில் கூட தான் அழகு. 
மலர் மட்டுமா அழகு, 
விழும் இலை கூட ஒரு அழகு! என உலகின் எல்லா பரிமாணங்களையும் ரசிக்க வைத்தார் நா.முத்துக்குமார்.


மலைகள் மண் மாதாவின் மார்பகங்கள் ...
இவ்வளவு பெரியதா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் 
எவ்வளவு மேகக் குழந்தைகள்?
அத்தனைக்கும் பாலூட்ட வேண்டாமா? என்று கவிதையிலேயே குறும்பைப் புகுத்தினார் வாலி. 

சிந்திக்க வைக்கும் கவிதைகளை எழுதவும் அவர் தவறவில்லை. 

தன் தலையைச் சீவியவனுக்கே 
தண்ணீர் தருகிறது இளநீர் 

*

தன் தோலை உரித்தவனின் கண்களில் 
நீர் வர வைக்கிறது வெங்காயம்! என்றார் வாலி. 

எங்கேயோ திடீரென நாம் வாசிக்க நேரும் கவிதை, நம்மை வருடிச் செல்கிறது. புன்னகைக்க வைக்கிறது. சோகத்தில் ஆழ்த்துகிறது. மறைந்து கிடந்த காயத்தைக் குத்திக் கிளறுகிறது. யாரோ ஒருவரை நம் நியாபகக் கற்றையில் இருந்து மீட்டெடுக்கிறது. பால்யத்துக்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. நேசத்துக்கு உரியவருக்கு, 'என்னை அனுப்பு' என்று சொல்கிறது. 

ஓவியம், புகைப்படம் என கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று கவிதை. மானுட உணர்வுகளின் வடிகாலாய் காலத்துக்கும் அழியாது நிற்கிறது.

கவிதை தினமான இந்த நன்னாளை, கவிதை எழுதியோ, பிடித்த கவிதைகளைப் பகிர்ந்தோ கொண்டாடுவோம்.

*

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
Embed widget