மேலும் அறிய

ஒத்துழைக்காத தீட்சிதர்கள்: திரும்பி சென்ற அதிகாரிகள் - சிதம்பரம் கோயிலில் இன்று ஆய்வு நடைபெறுமா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று ஆய்வுக்கு வந்த, அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிய நிலையில், இரண்டாவது நாள் ஆய்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வரப்பட்டன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் நேற்று காலை 10 மணிக்கு கோயிலுக்குள் வந்தார். 


ஒத்துழைக்காத தீட்சிதர்கள்: திரும்பி சென்ற அதிகாரிகள் - சிதம்பரம் கோயிலில் இன்று ஆய்வு நடைபெறுமா?

அவர்களுக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். கோயிலுக்கு வந்ததும் அதிகாரிகளை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கோயில் கனகசபை மீது அவர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து வைத்தனர். இதையடுத்து தாங்கள் கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒத்துழைக்காத தீட்சிதர்கள்: திரும்பி சென்ற அதிகாரிகள் - சிதம்பரம் கோயிலில் இன்று ஆய்வு நடைபெறுமா?

அப்போது ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.


ஒத்துழைக்காத தீட்சிதர்கள்: திரும்பி சென்ற அதிகாரிகள் - சிதம்பரம் கோயிலில் இன்று ஆய்வு நடைபெறுமா?

இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் நின்றபடி ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள கோப்புகளை படித்துப் பார்த்தனர். தொடர்ந்து ஒருமணி இருந்து 4 மணி வரை கோயில் நடை பூட்டப்படும் என்பதால், அதிகாரிகள் உணவு இடைவேளைக்காக வெளியே சென்றனர். மீண்டும் ஆய்விற்காக மாலை 5 மணிக்கு மேல் வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் காலையில் கூறிய பதிவான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒத்துழைக்காத தீட்சிதர்கள்: திரும்பி சென்ற அதிகாரிகள் - சிதம்பரம் கோயிலில் இன்று ஆய்வு நடைபெறுமா?

 

மேலும் உச்ச  நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வுக்கு வந்தால் மட்டுமே ஆய்வு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்தால் மீண்டும்  ஆலோசனையில் ஈடுபட்ட  அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை காத்திருந்து ஆய்வை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இரண்டு நாட்கள் கண்டிப்பாக ஆய்வு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று கூறி நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆய்வு நடைபெறுமா? அல்லது கோயில் பொது தீட்சிதர்கள் ஆய்வு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கடிதம் கொடுத்து விட்டு, அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்களில் ஈடுபடுவார்களா என இன்று தெரியவரும். இதனால் இரண்டாவது நாளாக கோயிலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Tata Sierra: சியாரா டீசல் எடிஷன் தான் வேண்டும்..! டாடா டீலர்களை அலறவிடும் பயனர்கள் - மைலேஜ், விலை விவரங்கள்
Tata Sierra: சியாரா டீசல் எடிஷன் தான் வேண்டும்..! டாடா டீலர்களை அலறவிடும் பயனர்கள் - மைலேஜ், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Tata Sierra: சியாரா டீசல் எடிஷன் தான் வேண்டும்..! டாடா டீலர்களை அலறவிடும் பயனர்கள் - மைலேஜ், விலை விவரங்கள்
Tata Sierra: சியாரா டீசல் எடிஷன் தான் வேண்டும்..! டாடா டீலர்களை அலறவிடும் பயனர்கள் - மைலேஜ், விலை விவரங்கள்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Credit Score: க்ரெடிட் ஸ்கோரை ஏத்தனுமா? சிம்பிள் டிப்ஸ், என்ன செய்யலாம்? லோனை கொட்டிக் கொடுக்கும் வங்கிகள்
Credit Score: க்ரெடிட் ஸ்கோரை ஏத்தனுமா? சிம்பிள் டிப்ஸ், என்ன செய்யலாம்? லோனை கொட்டிக் கொடுக்கும் வங்கிகள்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget