மேலும் அறிய

தாயை தேடி சைக்கிளில் புறப்பட்ட 9 வயது சிறுவன்: போலீஸ் ரோந்தில் வெளியான நெகிழ்ச்சி சம்பவம்!

தந்தையிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற தாயை தேடி 9 வயது சிறுவன் சைக்கிளில் புறப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் ரகுராமன். கிராம நிர்வாக உதவியாளர். இவரது மனைவி ஸ்வஸ்திக். இவர்களது மகன் சபரிநாத்(வயது 9).  திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் ஸ்வஸ்திக், கணவரிடம் கோபித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.


தாயை தேடி சைக்கிளில் புறப்பட்ட 9 வயது சிறுவன்: போலீஸ் ரோந்தில் வெளியான நெகிழ்ச்சி சம்பவம்!

 

கொரோனா காலத்துல பிறந்த குழந்தையை எப்படிங்க கொஞ்சுறது? ஜப்பான் மக்களின் அன்பு வழி..!

கடந்த சில நாட்களாக தாயை பார்க்க முடியாமல் சபரிநாத் தவித்துள்ளார். தனது தாயை பார்க்க அந்த சிறுவன் முடிவு செய்தார். ஆனால் பஸ்சில் தியாகதுருகத்திற்கு செல்ல அந்த சிறுவனிடம் பணம் இல்லை. எனவே பெற்றோர் வாங்கிக்கொடுத்த சிறிய சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து தியாகதுருகத்திற்கு செல்ல சபரிநாத் முடிவு செய்தார். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக தியாகதுருகத்திற்கு 103 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த தூரத்தை ஒரு பொருட்டாக கருதாமல் சிறுவன் சபரிநாத்,   மாலை 6 மணி அளவில் திண்டிவனத்தில் இருந்து சைக்கிளில் தியாகதுருகத்திற்கு புறப்பட்டார்.


தாயை தேடி சைக்கிளில் புறப்பட்ட 9 வயது சிறுவன்: போலீஸ் ரோந்தில் வெளியான நெகிழ்ச்சி சம்பவம்!

 

கூட்டேரிப்பட்டு, செண்டூரை தாண்டி பாதிராப்புலியூரில் இரவு 7 மணி அளவில் சென்றபோது, ரோந்து வந்த மயிலம் காவல் ஆய்வாளர் கிருபா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சிறுவனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, தியாகதுருகத்தில் உள்ள தனது தாயை பார்க்க செல்வதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், திண்டிவனத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம்தான் வந்திருக்கிறாய். இன்னும் 88 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எப்படி செல்வாய் என்று கேட்டனர். அதற்கு சிறுவன் சபரிநாத், 1 மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் வந்து விட்டேன். இப்படியே வேகமாக சென்றால், விரைவில் தாயை பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

 


தாயை தேடி சைக்கிளில் புறப்பட்ட 9 வயது சிறுவன்: போலீஸ் ரோந்தில் வெளியான நெகிழ்ச்சி சம்பவம்!

 

ஆனால் அவனை சைக்கிளில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், நடந்த விவரத்தை கூறினர். பின்னர், அங்கு பதறியடித்துக்கொண்டு வந்த ரகுராமிடம் சபரிநாத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். இது குறித்து அவரிடம் கேட்கும் போது, சபரிநாத்தை இரண்டு மணி நேரமாகக் காணவில்லை என்று பல இடங்களில் தேடிவந்தேன். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது தான் எனக்கு சபரிநாத் இங்கு இருப்பதாக அழைப்புவந்தது என்றார்.

ஆடிப்பூர உற்சவத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget