மேலும் அறிய

போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?

குறைந்த பட்சம் 25 இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அடிமட்ட தொண்டர்களின் மனநிலையும் இதுதான்

தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் நாங்கள் முடிவு செய்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக தமிழக அரசியல் பல பரபரப்புகளையும் தலைப்புச் செய்திகளையும் கொடுத்து வருகிறது திருமாவளவனின் விசிக. அக்கட்சியில் இருந்தபோது பல அதிரடி முடிவுகளை ஆளுங்கட்சிக்கு எதிராக எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விசிக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் தலைமையின் கருத்தை கேட்காமல் அரசியல் பேசியதே அவர் இடைநீக்கம் செய்யப்பட காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் சில நாட்களில் ஆதவ் அர்ஜுனனே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போதாவது அக்கட்சியின் உட்கட்சி பூசல் குறையும் என்று எதிர்பார்த்தால் அடுத்த புயலை கிளப்பியுள்ளார் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு. 

விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், “விசிகவை திருமாவளவன் தொடங்கியபோது எம்.பி ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று எண்ணி கட்சிக்கு வராதீர்கள் என்று சொன்னார். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னைப்போன்றவர்கள், இளைஞர்கள் விசிகவில் அடிமட்ட தொண்டர்களாக அணி திரண்டனர். அவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். தற்போது விசிக இருக்கும் வலிமைக்கு குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என என்னை போன்ற அடிமட்ட தொண்டர்கள் விரும்புகின்றனர். அதற்காக கூடுதலான இடங்களை கேட்டு பெற வேண்டும் என நினைக்கின்றனர். குறைந்த பட்சம் 25 இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அடிமட்ட தொண்டர்களின் மனநிலையும் இதுதான். இந்த இயக்கம் தமிழர்களை பாதுகாக்கக்கூடிய, தமிழர்களின் உரிமையை பாதுகாக்கக்கூடிய, சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் அம்பேத்கரின் கொள்கைகளை, பெரியாரின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டிருக்கிற பேரியக்கம். வலிமையாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு எவ்வளவு இடங்கள் என தலைவர் முடிவு எடுப்பதுதான். ஆனால் எங்கள் விருப்பத்தை நாங்கள் தலைவரிடம் சொல்வோம்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ”தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் நாங்கள் முடிவு செய்வோம். முன் கூட்டியே இவ்வளவு இடங்கள் வேண்டும் என்றெல்லாம் ஒரு நிபந்தனையாக முன்வைக்கமாட்டோம். அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை. ஏற்கெனவே எங்களுக்கு பத்து தொகுதி கொடுத்திருக்கிறார்கள். அது இரட்டை இலக்கம் தான். 2011ஆம் ஆண்டில் 12 தொகுதிகள் வரை பேசி சில தவிர்க்க முடியாத காரணத்தால் 10 தொகுதிகள் என பேசி முடிவு செய்தோம். ஆகவே எங்கள் எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என எண்ணுவது இயல்பான ஒன்றுதான். ஒரு கட்சியில் கூட்டணியில் இருக்கும்போது பல கட்சிகள் இருப்பதால் அனுசரித்து எங்கள் முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget