மேலும் அறிய

ரஞ்சித் படத்தை நான் பார்க்கவில்லை - திருமாவளவன் ஏன் அப்படி சொன்னார்?

2014ம் ஆண்டு பாமக தொடரப்பட்ட வழக்கில் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிரபித்த நிலையில் நேரில் திருமாவளவன் ஆஜரானார்.

புதுச்சேரி: பாமக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிரப்பித்த நிலையில் நேரில் திருமாவளவன் ஆஜரானார்.

விசிக தலைவர் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர் 

புதுச்சேரியில் 2014ம் ஜனவரியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர், தலித் அல்லாத பிற சமூகத்துக்கு எதிராக பேசியதாகவும் பகையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பாமக புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் பத்து வருட காலமாக ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

பாமக தொடுத்த வழக்கு; திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்

இதன் அடிப்படையில் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு தொல் திருமாவளவன் நேரில் ஆஜரானார். நீதிமன்றத்தில் எந்த அரசியல் தலைவர்கள் ஆஜரானாலும் கட்சி கொடி இல்லாமல் வரவேண்டும். ஆனால் திருமா கார் கட்சி கொடியுடன் வந்தது. புதுச்சேரி நீதிமன்றத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆஜரான திருமாவளவன் குற்றப்பத்திரிகையை பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து திருமாவளவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அவர் வெளியே வந்தார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 2014ம் ஜனவரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது, தலித் அல்லாத பிற சமூகத்துக்கு எதிராக பேசியதாகவும் பகையை துண்டு வகையில் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவானவர் என்ற அறிவிப்போடு நீதிமன்றத்தில் ஆஜராகும் கூறினார்கள். அதனால் ஆஜராகி வழக்கை விரைந்து நடத்துமாறு கூறியுள்ளேன். இது பொய் வழக்கு, தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்து இருக்கிறோம். இந்தப் பொய் வழக்கில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

திமுக கூட்டணியில் விரிசல்!

மேலும், திமுக கூட்டணியில் விரிசல் விழாதா..? என ஏங்கிக் கிடப்பவர்கள் வதந்தி பரப்புகின்றனர். விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்போடு உள்ளது. உரிமை தொடர்பாக எழுப்பும் குரல் வேறு. கூட்டணி தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்பது வேறு. இந்த வதந்தி எங்கள் கூட்டணி பாதிக்காது.

விளையாட்டுத் துறையை சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இது போன்ற போட்டிகள் நடத்துவது மூலம் தலைநகர் சென்னையில் சுற்றுலா கவர்ந்து இழுக்க கூடிய வாய்ப்பாக இருக்கும். தொழில் முதலீட்டாளர்களை சென்னை நோக்கி அழைக்க ஏதுவாக அமையும். பெங்களூர், புதுடெல்லி போன்ற நிகழ்வுகளில் நடத்துவதன் மூலம் தான் அந்த நகரங்களில் தொழில் முதலீடுகள் பெறுகின்றன. அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏற்படுத்துள்ள நிகழ்ச்சியின் காரணமாக நீதிமன்றமும் போட்டியை நடத்த தீர்ப்பளித்துள்ளது என்று நம்புகிறேன். 

ரஞ்சித் படத்தை நான் பார்க்கவில்லை 

இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டும் நீங்கள் இயக்குனர் ப.ரஞ்சித்தை ஏன் பாராட்டவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், வாழை திரைப்படம் பார்த்து படம் நன்றாக இருப்பதாக இயக்குனர் மாரி. செல்வராஜை பாராட்டினீர்கள். ஆனால் தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தை பாராட்டவில்லையே என்ற கேள்விக்கு அந்த படத்தை பார்க்கவில்லை பார்த்த பிறகு தான் பாராட்ட முடியும் திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget