மேலும் அறிய

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? பரபரப்பில் ரசிகர்கள்!

புதுச்சேரி:  புதுச்சேரியில் டிசம்பர் 5-ல் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி டிஜிபியிடம் தவெகவினர் மனு அளித்தனர்.

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த உள்ளார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் த.வெ.க.,வினர் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில்  தவெக தலைவர் விஜய் 'ரோடு ஷோ'

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த உள்ளார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் த.வெ.க.,வினர் மனு அளித்துள்ளனர். தமிழகம், புதுவையில் 2026 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார்.

இதனிடையே, கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை தவெக உருவாக்கி உள்ளது. இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் அண்மையில் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் வெளியே வருவேன் என்று அவர் கூறியிருந்தார்.

தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் வரும் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்தார்.

‘விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தராதீர்’

இந்த நிலையில் ‘விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தராதீர்’ என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிஜிபிக்கு மனு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக டிஜிபிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இளங்கோ அனுப்பிய மனுவில், ‘புதுச்சேரியில் நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்த தவெகவினர் மனு தந்துள்ளனர்.

கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் இறந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மீறி அனுமதி தந்தால் போராட்டம் நடத்துவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர் அசோக் ராஜா டிஜிபி அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கரூரில் நடந்த விஜய் பிரச்சார நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். இதற்காக போலீஸ் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று தவெகவினர் வந்தனர். அங்கு டிஜிபி ஷாலினிசிங் இல்லாததால், அவரது அலுவலகத்தில் அனுமதி கேட்டு, புதுவை மாநில தவெக நிர்வாகி புதியவன் கையெழுத்திட்ட மனு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

சிறிய ஊரான புதுச்சேரியிலும் பாதிப்பு நிகழ வாய்ப்பு

அந்த மனுவில், ‘தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர்டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் ஒலிப்பெருக்கி மூலம் உரையாற்ற உள்ளார். எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

டிசம்பர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் கடலூருக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

இந்நிலையில் தவெகவினர், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ரோடு ஷோவுக்கு அனுமதிக் கோரும் கடிதத்தை அளித்தனர். பொது இடங்களில் குறிப்பாக பிரதான சாலைகளில் பெரும் கூட்டத்தை திரட்டும் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை கரூர் நிகழ்வு தெளிவாக காட்டியது.

புதுச்சேரியில் பிரதான சாலைகள், கிழக்கு கடற்கரைச்சாலை பகுதிகள், அன்றாட போக்குவரத்து நெரிசலால் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரளும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கினால், சிறிய ஊரான புதுச்சேரியிலும் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது.

 

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், பொது மக்களின் அன்றாட பயணம், மாணவர்கள், முதியோர், நோயாளிகள் ஆகியோருக்கும் இடையூறு ஏற்படும். மக்களின் உயிருக்கும் பாதுகாப்பும் முன்னுரிமை அளித்து விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் அனுமதி தரவேண்டாம். முறையான ஏற்பாடுகளுடன் மைதானம் அல்லது மூடப்பட்ட இடத்தில் நடத்த அனுமதி தரலாம். பொது சாலைகளில் ரோடு ஷோ நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget