மேலும் அறிய

திருச்சி-டெல்லி நேரடி விமான சேவை: செப்டம்பர் 16 முதல் ! பயணிகளுக்கு இனிமையான செய்தி!

திருச்சியில் இருந்து டெல்லிக்கு விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் செப்டம்பரில் 16 முதல் விமானங்களை இயக்க உள்ளது.

சென்னை : திருச்சியில் இருந்து டெல்லிக்கு விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் செப்டம்பரில் 16 முதல் விமானங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியில் இருந்து டெல்லிக்கு விமான சேவை

திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சார்ஜா, யாழ்ப்பாணம், பாங்காக் போன்ற சர்வதேச நகரங்களுக்கும், வாராந்திர மற்றும் தினசரி அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும், டெல்லிக்கு செல்ல நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால், வணிகம் மற்றும் பிற காரணத்திற்காக திருச்சியில் இருந்து டெல்லி செல்ல நினைப்போர், சென்னை அல்லது பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால், பயண நேரம் மற்றும் விமான கட்டணம் அதிகமானது. எனவே, திருச்சியில் இருந்து டெல்லிக்கு, நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்று, பயணியர் மற்றும் எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்கு துரை வைகோ நேரில் சென்று கோரிக்கை கடிதமும் வழங்கினார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முதலில் சேவையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இண்டிகோ நிறுவனம் திருச்சி - டெல்லிக்கு இடையே தினசரி விமானங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர், 16 முதல் விமானங்களை இயக்க உள்ளதாக, விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானம்

திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.15 மணிக்கு டெல்லியை அடையும் என்றும், டெல்லியில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்சியை அடையும் என்றும் விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி-டெல்லி-திருச்சி பகுதியில் 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானங்களை இந்த விமான நிறுவனம் இயக்கும்.

இந்த விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு உள்நாட்டு விமானங்களை இயக்குகிறது, மேலும் இலங்கையில் சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் வெளிநாட்டு சேவைகளை இயக்குகிறது. விமான இயக்கங்கள் மற்றும் முன்பதிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை www.goindigo.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்

திருச்சிராப்பள்ளிக்கு சேவை செய்யும் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் 31வது பரபரப்பான விமான நிலையமாகவும் , மொத்த வெளிநாட்டு விமான இயக்கத்திற்கு 10வது பரபரப்பான விமான நிலையமாகவும் உள்ளது. சர்வதேச இணைப்புகளைப் பொறுத்தவரை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குப் பிறகு, மாநிலத்தின் இரண்டாவது பரபரப்பானதாகவும் , சென்னை மற்றும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையங்களுக்குப் பிறகு, சேவை செய்யப்படும் பயணிகளைப் பொறுத்தவரை மூன்றாவது பரபரப்பானதாகவும் உள்ளது .

நான்கு உள்நாட்டு மற்றும் 10 சர்வதேச இடங்களுடன் நேரடி இணைப்புகளைக் கொண்ட இந்த விமான நிலையம், இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது , இரண்டு இந்திய மற்றும் ஐந்து வெளிநாட்டு விமான நிறுவனங்களால் சேவை செய்யப்படுகிறது. இந்த விமான நிலையம் அக்டோபர் 2012 இல் ஒரு சர்வதேச விமான நிலையமாக நியமிக்கப்பட்டது மற்றும் ISO 9001:2008 சான்றிதழைப் பெற்றுள்ளது. மூன்று ஏரோபிரிட்ஜ்கள் கொண்ட ஒரு புதிய பயணிகள் முனையம் கட்டப்பட்டது, அதே நேரத்தில் விமான நிலையத்தின் பழமையான முனையம் சரக்கு வளாகமாக மாற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2024 இல் ஒரு புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget