மேலும் அறிய

Watch Video: இன்று முதல் நீ கடவுள்.. சென்னையில் வெள்ள நிவாரண நிதி வாங்கிய திருநங்கை செய்த செயல்..

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டை இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

சென்னையில் வெள்ள நிவாரண நிதி வாங்கிய திருநங்கை ஒருவர் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்ட நிலையில் சென்னை மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை, ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 

அதேசமயம் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். வெள்ளம் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டை இருப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

தற்போது வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.அதேசமயம் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ரேஷன் கார்டு வேறு முகவரியிலும், இன்னும் பெறாமலும் உள்ள நிலையில் அவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்களும் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இதுவரை 5.5 லட்சம் பேர் 4 மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

இதனிடையே எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காக பரவி வருகிறது. அதில் திருநங்கை ரோஜா என்பவர் வெள்ள நிவாரண நிதியாக பெற்ற ரூ.6 ஆயிரம் பணத்தை கவர் ஒன்றில் வைத்து இயலாதோருக்கு வழங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவை புதுச்சேரி மகளிர் அணியை சேர்ந்த காயத்ரி ஸ்ரீகாந்த் என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. பலரும் திருங்கை ரோஜாவின் செயலுக்கு பாராட்டு  தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget