மேலும் அறிய

Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!

Ilaiyaraaja: “என்னைப் பற்றி வரும் செய்திகளை கவனிப்பது என் வேலை இல்லை” என்று இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இளையராஜா

இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.  தான் இசையமைத்த பாடல்களின் மேல் தனக்கே முழு உரிமை உள்ளதாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து " சில பாடல்களில் இசை சிறந்ததாக இருக்கும் சில பாடல்களில் மொழி சிறந்ததாக இருக்கும். இதை புரிந்துகொண்டவர் ஞானி புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி  என்று பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இளையராஜா பற்றி வைரமுத்து பேசிய கருத்திற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக கருத்து தெரிவித்திருந்தார்.  “இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை, இனிமேல் இளையராஜா பற்றி பேசினால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார். 

“இசை பெரிதா மொழி பெரிதா?” என்று இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்கள் பகிரப் பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இளையராஜா பேராசைப்படுவதாக அவரை பலர் விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமையை தொடர்பான நீதிமன்ற விசாரணையில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளட் உரிமை கோருவதைப் போல் பாடகர் , பாடலாசிரியர் ஆகியவர்களும் உரிமை கோரினால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூன் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. பாடல்கள் மூலமாக இளையராஜா சம்பாதித்த தொகை யாருக்கு சொந்தமானது என்பது நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்பட்டது.

மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை!

இந்த வீடியோவில் அவர் “ எல்லாருக்கும் வணக்கம். தினமும் ஏதோ ஒரு வகையில் என்னைப் பற்றிய நிறைய செய்திகளும் வீடியோக்களும் வருவதாக என்னுடைய நண்பர்கள் வழியாக தெரிந்துகொள்கிறேன். மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என்னை கவனிப்பது தான் என்னுடைய வேலை.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் சென்றுகொண்டிருக்கும் போதே நான் ஒரு முழு சிம்ஃபனியை அமைத்துவிட்டேன். கடந்த 35 நாட்களில் மற்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்து, ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இந்த சிம்ஃபனியை முழுவதுமாக உருவாக்கி இருக்கிறேன். இந்த சிம்ஃபனியில் திரையிசைப் பாடல்களின் எந்த பிரதிபலிப்பும் இருக்காது. அப்படி இருந்தால் அது சிம்ஃபனியும் இல்லை. இதை உங்களுடன் தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
Embed widget