![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jayakumar: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![Jayakumar: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு ! TN Local Body election 2022: Case filed agains Former Minister Jayakumar for disturbing local body polling Jayakumar: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/4fc79fa43984c6e1c8c518d9988f2582_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்வதாக தகவல் பரவியது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த வார்டு பகுதிக்கு விரைந்தார். அப்போது, சிலர் அந்த வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது தலைமையில் சென்ற வழக்கறிஞர் அணியினரும் துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒரு நபரை மட்டும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)