இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
பொதுமக்களையும் தொழில் நிறுவனங்களையும் மையப்படுத்திய சேவைகளைத் துரிதப்படுத்தவும் தாமதமில்லாமல் வழங்குவதற்கும் இத்திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் சேவைகளை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இன்று இரண்டு புதிய திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
எளிமை ஆளுமை திட்டம்:
சென்னை தலைமை செயலகத்தில் இன்று எளிமை ஆளுமை என்னும் புதிய திட்டம் ஓன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி பொதுமக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் அரசால் வழங்கப்படும் சேவைகளுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அதை உடனுக்குடன் வழங்க இந்த திட்டம் வழிவகுக்கும் .
என்னென்ன சேவைகள் வழங்கப்படும்:
- சுகாதாரச் சான்றிதழ்
- பொதுக் கட்டட உரிமம்
- பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம்
- மகளிர் இல்லங்களுக்கான உரிமம்
- புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்குப் பயன்படுத்த தடையின்மைச் சான்றிதழ்
- சொத்துமதிப்புச் சான்றிதழ்
- முதியோர் இல்லங்கள் உரிமம்
- வெள்ளைவகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்
- நன்னடத்தைச் சான்றிதழ்
- அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டுப் பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ்
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- வெள்ளைவகை தொழிற்சாலைகள் பட்டியல் 609ஆக உயர்த்தப்படுகிறது.
- நம்பிக்கை அடிப்படையில் சுயச் சான்றிதழ்
- தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள்
- தனி சார்பு அமைப்பின் சான்றிதழ்
- இணைய சரிபார்ப்புகள்
- உரிமங்களுக்கான காலவரையறையை நீட்டித்தல்
- இணையதளம் மூலமாக விரைவான ஒப்புதல்கள்
- எளிய நடைமுறை. அனைவருக்கும் பயன்
“எளிமை ஆளுமை” திட்டம் தொடக்க விழா !#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/uxkTOLdGnA
— TN DIPR (@TNDIPRNEWS) May 29, 2025
பொதுமக்களையும் தொழில் நிறுவனங்களையும் மையப்படுத்திய சேவைகளைத் துரிதப்படுத்தவும் தாமதமில்லாமல் வழங்குவதற்கும் இத்திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்:
அதே போல வேளாண்மை விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு அவரவர் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் 'உழவரைத் தேடி வேளாண்மை திட்டமும் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
''உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை”#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer @doa_tn pic.twitter.com/UJWNQipOSs
— TN DIPR (@TNDIPRNEWS) May 29, 2025
இந்த புதிய திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் 17116 வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.






















