மேலும் அறிய

CM Stalin: முதலமைச்சர் துறைக்கே இந்த நிலைமையா? கருணாநிதி பெருமைக்கே ஆப்பு? ஸ்டாலின் ஆக்‌ஷன் எடுப்பாரா?

EPS On CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ள, மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் பயனாளிகளுக்கு 3 மாதங்களாக மாதந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

EPS On CM Stalin: மாற்றுதிறனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக மாதந்திர உதவித்தொகை வழங்கப்படாததற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும்  மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய அமைச்சரவைகள் உள்ளன. அவற்றில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை எப்போதும் தனக்கு தனி முக்கியத்துவம் வாய்ந்தது என ஸ்டாலினே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, “மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு"மாற்றுத்திறனாளிகள்" என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்” என மார்தட்டி பெருமை பேசுவது உண்டு.

பெருமை பேசினால் மட்டும் போதுமா?

அதன் காரணமாகவே இன்றளவும் அந்த துறையை தன்வசமே வைத்து தேவையான நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், அப்படி பெருமை மட்டுமே பேசினால் போதுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அன்றாட தேவைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டிய மோசமான சூழலை தவிர்க்க உதவுறது. ஆனால், கடந்த மூன்று மாதாங்களாக மாற்றுதிறனாளிகளுக்கான, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முதலமைச்சர் துறையே இப்படியா?

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா?

தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உதவித்தொகை இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.

சுயமாக வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கும் மாற்று திறனாளிகளுக்கு, அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால், அந்த உதவியும் நிறுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கருத்தில் கொண்டு, பயனாளர்களுக்கு உதவித்தொகை சென்றடைய விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget