மேலும் அறிய

Chief Secretary Shivdas Meena: 150 டி.எம்.சி அளவு தண்ணீர்.. மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..

தூத்துகுடியில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “ மீட்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இன்னும் நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தண்ணீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே பாலம் அருகில் இருக்கும் தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த அளவு மழை பெய்தால் எவ்வளவு பெரிய குளமாக இருந்தாலும் நிரம்பத்தான் செய்யும். 40 மணி நேரத்தில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டரில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பரப்பளவு) 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 டி.எம்.சி தண்ணீர் அதாவது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 50% அதிகமாகும். பாபநாசம் மணிமுத்தாறு அணையில் 10 மடங்கு அதிக தண்ணீர். இந்த தண்ணீர் கடலுக்கு சென்றாக வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.200 கோடி மதிப்பில் இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக மோட்டர் பம்புகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் இந்த மழை வெள்ள பாதிப்புகளில்  தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரண தொகை வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
TVK Vijay: புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Upanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | AnnamalaiAadhav Arjuna Joined TVK | தவெக-வில் இணையும் ஆதவ்?விஜய்யின் MASTER PLAN! சந்திப்பில் நடந்தது என்ன?Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
TVK Vijay: புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
சட்டம் - ஒழுங்கு...இந்த வீடியோவே உதாரணம்... - அண்ணாமலை அட்டாக்
சட்டம் - ஒழுங்கு...இந்த வீடியோவே உதாரணம்... - அண்ணாமலை அட்டாக்
Chennai Tourist Place: சென்னையில் சுத்திப் பார்க்க இவ்ளோ இடங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
Chennai Tourist Place: சென்னையில் சுத்திப் பார்க்க இவ்ளோ இடங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget