![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..!
அண்ணாவை பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை பேசுகிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
![Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..! TN BJP Leader Annamalai Press Meet Speaks About AIADMK BJP Alliance There is No Rift Between ADMK BJP Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/d1deec824582a5e2584f16d0aa1918711695285426648571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை.
எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை. பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன். திமுக விஷம், திமுகவை அடியோடு வெறுக்கிறேன், நான் ஆக்ரோஷமான அரசியல் செய்கிறேன். அண்ணாவை பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை பேசுகிறேன்” என தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு:
மகளிர் இடஒதுக்கீடு பற்றி பேசிய அண்ணாமலை, “33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது. சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது, இதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். ஏக மனதாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளனர். இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம். ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை. சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்? இது மகளிருக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய வாய்ப்பு.” என தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி:
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, “அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சனை இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் உடன் அண்ணாமலைக்கு பிரச்சனை இருக்கலாம். மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர். செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பேசுவேன். தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன். எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியாது. பாஜக- அதிமுக இடையே பிரச்சனை இல்லை, வெவ்வேறு சித்தாந்தங்கள் இருக்கும்போது முட்டல்-மோதல் வரத்தான் செய்யும்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)