மேலும் அறிய

திருவண்ணாமலை : ’மாடு மேய்த்தவரை தலைவராக ஏற்கமுடியாது’ என அராஜகம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவர் புகார்!

எங்கள் வீட்டில் மாடு மேய்த்தவரை, ஊராட்சி மன்ற தலைவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என ஊராட்சி செயலாளர் அடாவடித்தனத்தால், ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராமங்கள்வாரியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வந்தது இதில் ஏழுமலை என்பவர் 12.12.2019-இல் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 30.12.2019 வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒருமாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றபோது அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக, இப்பகுதிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியல்  இனத்திலிருந்து ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை.


திருவண்ணாமலை : ’மாடு மேய்த்தவரை தலைவராக ஏற்கமுடியாது’  என அராஜகம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவர் புகார்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாக்களித்த மக்களுக்கு எந்தப் பணியும் செய்யவிடாமல் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் இடையூறு செய்து வந்திருக்கிறார்.  ”எங்கள் வீட்டில் மாடு மேய்த்த வரை ஊராட்சி மன்ற தலைவராக ஏற்க முடியாது” என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் இருக்கையில் அமர விடாமல் தனியாக பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைத்து அவமானப் படுத்துவதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வருவதால் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் எப்போதும் மூடிய நிலையிலேயே வைத்துள்ளதாகவும், ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தேவைப்பட்ட கையொப்பத்தை பெறுவதற்கு மட்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து கையொப்பம் பெற்றுக்கொண்டு அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கான எவ்வித பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், தன்னை ஒருமையில் பேசுவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை வேல்முருகனே செய்வதும் இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் தெரிவித்தும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஏழுமலை.

திருவண்ணாமலை : ’மாடு மேய்த்தவரை தலைவராக ஏற்கமுடியாது’  என அராஜகம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவர் புகார்!

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டு பின்பு அந்த ஊராட்சிக்கு விசாரணைக்காக வந்த மாவட்ட திட்ட இயக்குநர் ஒரு தலைபட்சமாக விசாரணை செய்தும் இருவரும் சமரசமாக செல்லும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் மன உளைச்சல் தருவதாகவும், தன்னை நம்பி வாக்களித்த கிராம மக்களுக்கான ஊராட்சி பணிகளை செய்ய இடையூறு செய்வதால் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

”எங்கள் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கொடுக்காமல் அவருடைய உறவினருக்கும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும்  ஊராட்சி செயலாளர் கொடுத்து வருகிறார். இதைக்கேட்டால் என்னை மிரட்டுகிறார்” என்று முறையிட்டு, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பூட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார் ஏழுமலை. மேலும் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவரும், ஊர் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Embed widget