மேலும் அறிய

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்

Thrissur ATM Theft: போலீசார் மீது காயம் ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடியபோது, ஜூமான் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். எனினும் திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை.

ஹரியாணாவைச் சேர்ந்த ஏடிஎம்கொள்ளையர்கள், திருச்சூரில் இருந்து திருடிய பணத்துடன் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பிடிபட்ட நிலையில், கொள்ளையர்களைப் பிடித்தது குறித்து சேலம் டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

’’திருச்சூர் எஸ்பி அளித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிரிட்டா காரை சோதனை செய்து வந்தோம். பின்னர் கன்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் வருவதாக தெரிவித்த தகவலின் பேரில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாலேயே கண்டைனர் லாரியைத் துரத்திப் பிடிக்க நாமக்கல் காவல் துறையினர் முயன்றனர். 

சங்ககிரி டோல்கெட் வரை கண்டெய்னர் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளது. அப்போது இதர வாகனங்களை மோதியபடி சென்றது.  வாகனத்தின் முகப்பில் 4 பேர் இருந்தனர். 

வாகனத்தை வெப்படை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும்போது வாகனத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாகனத்தில் இருந்து இரண்டு பேர் பையுடன் தப்பிச் செல்ல முயன்றனர். 

திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை

அவ்வாறு சம்பந்தப்பட்ட லாரியைத் துரத்திப் பிடித்தபோது கொள்ளையர்கள், வண்டியில் இருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் மீது காயம் ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடியபோது, ஜூமான் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். எனினும் திட்டமிட்டு, என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட லாரி வழக்கமாக சரக்கு ஏற்றி வரும் வாகனம்தான்.

கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரில் 5 பேர் பல்வாள் மாவட்டத்தையும் 2 பேர் நூ மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 7 கொள்ளையர்களில் ஒருவரான ஜூமான் (40 வயது) என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், அஸ்ரூ என்னும் குற்றவாளி (28 வயது) 2 கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து, பள்ளிபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கொள்ளையர்களிடம் வெப்படை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்ததோ, அவர்கள் எல்லோரும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை

பணம் அதிகமாக இருக்கும் என்பதால், எஸ்பிஐ ஏடிஎம்க்களுக்கு குறி வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் ஏடிஎம்மைப்பார்த்து, குறிவைத்து கொள்ளை அடித்துள்ளனர். பிடிபட்ட கும்பல் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை. டெல்லியில் இருந்து சரக்கு ஏற்றி வந்ததுபோல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்’’.

 இவ்வாறு சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget