மேலும் அறிய

மாணவரின் ருத்ராட்சை மாலையை அறுத்த ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

’’அஇந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலகருக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு’’

 திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அடுத்த தெய்யார் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்துள்ளனர். இந்தநிலையில் இந்தப் பள்ளியில் பணியாற்றும் வரலாறுஆசிரியர்  மற்றும் அறிவியல்ஆசிரியர்  ஆகிய இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, என்றும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது, தலையில் பூ வைக்கக்கூடாது என்று கூறியுள்ளனர் இது சம்பந்தமாக பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

மாணவரின் ருத்ராட்சை மாலையை அறுத்த ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 3ஆம் தேதி தலைமை ஆசிரியரிடம் சென்று பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் மாணவர்களை ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்றும் நெற்றியில் பொட்டுவைக்க கூடாது  என கூறியுள்ளார். இதற்கு இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதற்கு தலைமையாசிரியர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை விசாரணை செய்யாமல், இந்த சம்பவம் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமலும் ஆசிரியர்கள் மீது எந்த விதமான  நடவடிக்கை எடுக்காமலும், அலட்சியம் காட்டியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்களை இரண்டு ஆசிரியர்கள் மீண்டும் அழைத்து மாணவர்களின் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையை அறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஒரு தலைபட்சமாக நடந்தால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்பட்டது.

மாணவரின் ருத்ராட்சை மாலையை அறுத்த ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து நாங்கள் புகார் அளித்தோம் ஆனால் அவர் இதுவரையில் அந்த  ஆசிரியர்களிடம் விசாரணையும் செய்யவில்லை தலைமை ஆசிரியர் ஒருதலபட்சமாக நடந்துக்கொண்டதால்  எங்களுடைய பிள்ளைகளின் கழுத்தில் இருந்து ருத்தராட்சையை அருத்துள்ளனர். மேலும் 2 ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.  இதையடுத்து ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாணவரின் ருத்ராட்சை மாலையை அறுத்த ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

இச்சம்பவம் குறித்து ABP NADU செய்தி நிறுவனத்திடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வன் கூறுகையில், தெய்யார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குறித்து தகவல் வந்தது. நான் வெளியூரில் இரண்டு நாட்களாக பயிற்சியில் உள்ளேன். இது குறித்து  என்னால் விசாரணை செய்யமுடியவில்லை. இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் விசாரணை செய்ய மாவட்ட கல்வி அலுவலரிடம் கூற உள்ளேன், இந்த சம்பவம் பற்றி விசாரணை இரண்டு நாட்களில் முடிந்து விடும் யார்மீது தவறு என்று தெரிந்து விடும் அதன் பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget