மேலும் அறிய

Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்

Thiruparankundram Temple Issue: திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மாறி, மாறி நடத்தும் போராட்டங்களால் மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று உலக நாடுகள் பாராட்டினாலும், மதநல்லிணக்கத்திற்கு இந்தியாவிலே மிகச்சிறந்த உதாரணமான மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு ஆகும். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம்:

தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். தைப்பூசம், கார்த்திகை, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி என முருகனுக்கு உகந்த நாட்களில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். மேலும், திருப்பரங்குன்றம் மலையில் மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக காசிவிஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் உள்ளது. 

மதநல்லிணக்கத்திற்கு இடையூறா?

இத்தனை ஆண்டுகளாக அங்கே இந்துக்களும், இஸ்லாமியர்களும் மலைக்கு மேலே சென்று முறையே கோயிலுக்கும், தர்காவிற்கும் சென்று வழிபட்டு வந்தனர். ஆனால், சமீபகாலமாக மதநல்லிணக்கத்திற்க கேடு விளைவிக்கும் வகையில் நடக்கும் நிகழ்வுகள் மக்களுக்கும், பக்தர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடாகவும், காசிவிஸ்வநாதர் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மாறி, மாறி போராட்டம் நடத்தி வந்த நிலையில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நெருங்கும் தைப்பூசம்:

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றும், இன்றும் மதுரை மாவட்டத்திற்கே 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இதனால், நேற்றும் இன்றும் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் வரும் 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருவிழாவிற்காக நாளை கொடியேற்றப்பட உள்ளது. இந்த சூழலில், முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் இதுபோன்ற மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பதற்றமான சூழல் நிலவுவது மக்களுக்கும், பக்தர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

அமைதி தேவை:

ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக மிகுந்த ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் பெற்றது முதலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மதக்கலவரங்கள் நடந்தது கிடையாது. பெரும்பாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். 

கோயில்களுக்கு நன்கொடைகளையும், வரிகளையுமே பல கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், திருப்பரங்குன்றத்தில் தற்போது நிலவும் இந்த பதற்றமான சூழலுக்கு நிரந்தரமான மற்றும் சுமூகமான முடிவை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்களும், மதுரை மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி.. சிலிண்டர் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?
Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி.. சிலிண்டர் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி.. சிலிண்டர் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?
Cylinder Price: காலையிலேயே நல்ல சேதி.. சிலிண்டர் விலை குறைப்பு, எவ்வளவு தெரியுமா?
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
EPS on Katchatheevu: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
TNGASA Admission: இன்னும் கல்லூரியில் சேரலையா? இதோ கடைசி வாய்ப்பு- அழைப்பு விடுத்த உயர் கல்வித்துறை!
TNGASA Admission: இன்னும் கல்லூரியில் சேரலையா? இதோ கடைசி வாய்ப்பு- அழைப்பு விடுத்த உயர் கல்வித்துறை!
இன்று முதல் காலவரையற்ற போராட்டம்; சென்னைப்‌ பல்கலைக்கழக ஊழியர்கள் அறிவிப்பு- என்ன காரணம்?
இன்று முதல் காலவரையற்ற போராட்டம்; சென்னைப்‌ பல்கலைக்கழக ஊழியர்கள் அறிவிப்பு- என்ன காரணம்?
ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்; முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு- சூடுபிடிக்கும் அரசியல் களம்!
ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்; முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு- சூடுபிடிக்கும் அரசியல் களம்!
Embed widget