மேலும் அறிய

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்துவிட்டது. வட தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த கர்நாடகா, ஆந்திரா அரசுகளின் தடுப்பணைகள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

"தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு , அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.


தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

விழாவில் கலந்துகொண்டு 484 பயனாளிகளுக்கு, 6 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அமைச்சர் துரைமுருகன், வறட்சி காலங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார். வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க தென்பண்ணை ஆற்றிலிருந்து படேதால்வாய் ஏரியிலிருந்து பர்கூர் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வரும் உபரி நீரை பாலாற்றில் கொண்டு வரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஏற்பட்டால் பாலாற்றில் 3 மாதம் தொடர்ந்து தண்ணீர் ஓடும்  நிலை ஏற்படும்.


தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

மேலும் மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க, அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாய சங்கத்தினரிடமும் , பொதுமக்கள் இடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் "கர்நாடக மாநிலம் நந்தி மலையை பிறப்பிடமாக கொண்ட பாலாறு 348 கிலோமீட்டர்  தூரத்தை கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதிகளை கடந்து காஞ்சிபுரம் அருகே வயலூர் என்ற கிராமத்தில் கடலில் கலக்கின்றது  .


தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இதில் கர்நாடகாவில் 93  கிலோமீட்டர்  தூரத்தையும் , ஆந்திரா மாநிலத்தில் 33 கிலோமீட்டர்  தூரத்தையும் கடந்து தமிழ்நாட்டில் 222 கிலோமீட்டர் தூரம் பறந்து விரிந்து ஓடிக்கொண்டிருந்த பாலாறுதான் வட தமிழ்நாடு விவசாயிகளின்  உயிர் நாடியாகும். கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்துவிட்டது. வட தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த கர்நாடக , ஆந்திரா அரசுகளின் தடுப்பணைகள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார் .

மேலும் வெங்கடேசன் கூறுகையில், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  5.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் , பாலாற்று பாசனத்தை நம்பியுள்ளன. இருப்பினும் ஆந்திரா - தமிழ்நாடு அரசுகளின் தடுப்பணை பிரச்சனைகளால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு கூலி வேளைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 


தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இந்நிலையில்தான் மத்திய நீர்வளத்துறை கடந்த  2008-ஆம்  ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓடும் தென் பெண்ணை ஆற்றை, பாலாற்றோடு இணைக்கும் திட்டத்திற்கான அறிக்கையை  வெளியிட்டது . அதன்படி 59.5 கி.மீ., நீள நெடுங்கல் அணையை நாட்றாம்பள்ளி கல்லாறு வரை இணைக்க ரூ.258.50 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது . ஆனால் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், இப்பணிகளை  இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.


தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாவது  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் வெங்கடேசன் .

தலைப்பு செய்திகள்

இனி குப்பை இல்லை... கட்டுமான வளம்! புதுச்சேரி இரும்பு ஆலை கழிவுகளுக்கு மெகா தீர்வு!
இனி குப்பை இல்லை... கட்டுமான வளம்! புதுச்சேரி இரும்பு ஆலை கழிவுகளுக்கு மெகா தீர்வு!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget