மேலும் அறிய

ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை கலந்து குடிக்கும் மது பிரியர்கள்

ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போதைக்காக ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை கலந்து மது பிரியர்கள் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுகிறது இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.  இதனால் அதிர்ச்சியடைந்த குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். தினமும் குடித்தே பாழாய்ப் போன குடிமகன்களின் பாடுதான் இப்போது திண்டாட்டமாகி விட்டது. ஊரடங்கால் இப்போது வேலை இல்லாததால் சரக்கு எங்கே கிடைக்கும் என வீதி வீதியாகவும், ஏரிக்கரை பகுதிகளில் தேடி அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்திருந்த சிலர், தற்போது கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலைக்கு விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.  சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின.


ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்களை போதை பாடாய்படுத்தியது. இதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். அதுவும் கிடைக்காமல் போனால் டியூப் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலுசனை முகர்ந்து பார்ப்பது, சோடாவில் காய்ச்சல் மாத்திரையை கலந்து குடிப்பது, குழந்தைகளுக்கான இருமல் டானிக்கை வாங்கி குடிப்பது, சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிப்பது என விபரீத முயற்சிகளில் இறங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் புதுவிதமாக போதைக்காக தலைவலி மாத்திரையை ஓம வாட்டரில் கலந்து குடிக்கும் வினோதம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது. திருக்கனூர், காட்டேரிக்குப்பம் போலீஸ் சரக பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தற்போது கடும் ஜோராக நடக்கிறது. அதாவது 30 ரூபாய்க்கு விற்ற 180 மில்லி அளவு கொண்ட சாராயம், தற்போது ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரூ.130-க்கு விற்ற குவாட்டர் பிராந்தி ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்ற போதிலும் போதைக்காக மது பிரியர்கள் அதை வாங்கி குடிக்கின்றனர். மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளதால் மதுபழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை விட முடியாமல் ஆபத்தான வழியில் இறங்கியுள்ளனர்.


ஓம வாட்டரில் தலைவலி மாத்திரை போட்டு புதுவித போதை ஏற்றும் குடிமகன்கள்!

அதாவது போதை ஏற வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் ஓம வாட்டரை வாங்கி, அதில் தலைவலி மாத்திரைகளை போட்டு கலந்து குடிக்கிறார்கள். இப்படி செய்வதால் போதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. சிலர் குளிர்பான பாட்டில்களில் தலைவலி மாத்திரையை போட்டு குடிக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அடிப்படையில் ஓம வாட்டர் விற்கும் கடைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது மதுபானத்தின் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அதேபோன்று தற்போது கொரோனா வரியை கூட்டி சிறிது நேரமாவது மதுக்கடையை திறக்க வேண்டும் என்பது மதுபிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget