மேலும் அறிய

Pongal Train Ticket:பொங்கலுக்கு எப்போ ஊருக்கு போறதா ப்ளான்? இன்றும் தொடங்கியது டிக்கெட் முன்பதிவு! - முழு விவரம்

பொங்கல் பண்டிகைக்கான இரண்டாவது நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிடும்படி ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

பொதுவாக பண்டிகை காலம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் நண்பர்கள் சூழ கொண்டாடுவார்கள். அதற்கு மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வது வழக்கம். பேருந்து, விமானம் என பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது ரயில் தான். ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல், பாதுகாப்பாக, அலைச்சல் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்ற காரணத்தால் மக்கள் ரயிலில் செல்ல விரும்புகின்றனர். மேலும் விமானம் மற்றும் பேருந்து ஆகிய போக்குவரத்து சேவைகளில் கட்டணம் அதிகம் என்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். 

பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வேலைக் காரணமாக தலைநகர் சென்னையில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். நடப்பாண்டு அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக வரும் தீபாவளி வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி (செப்டம்பர் 13) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியானது. இரண்டாவது நாளான இன்றும் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது. 

  • ஜனவரி 11 (வியாழக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நேற்று (செப்டம்பர் 13) முன்பதிவு செய்திருக்க வேண்டும்
  • ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் இன்று (செப்டம்பர் 14) முன்பதிவு செய்யலாம்
  • ஜனவரி 13 (சனிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
  • ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை) பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் சிரமமின்றி, கடைசி நேர சிக்கலை தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் பேருந்து, விமானம் அல்லது சொந்த வாகனம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள். ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்காக குறைந்தபட்சம் 7 லட்சம் மக்கள் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வது வழக்கம். 

OTT release this week : இந்த வீக் எண்டு என்ன படம் பார்க்கலாம்... ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget