![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain Pattern: காலையில் வெயில்.. மாலையில் மழை.. சட்டென்று மாறுது வானிலை.. காரணத்தை சொன்ன வானியல் ஆய்வாளர்கள்..
பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழை பெய்ய காரணம் என்ன என்பது தொடர்பாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை விரிவாக பார்க்கலாம்.
![TN Rain Pattern: காலையில் வெயில்.. மாலையில் மழை.. சட்டென்று மாறுது வானிலை.. காரணத்தை சொன்ன வானியல் ஆய்வாளர்கள்.. the reasons for rain in chennai is very normal pattern in the month of september former director of met department ramanan said TN Rain Pattern: காலையில் வெயில்.. மாலையில் மழை.. சட்டென்று மாறுது வானிலை.. காரணத்தை சொன்ன வானியல் ஆய்வாளர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/563b66e484d1ebb3fa29a9f4445659ef1695629296497589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரத்தில் நேர்மாறாக காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இந்த வானியல் மாற்றம் செப்டம்பர் மாதத்தில் நிகழக்கூடிய வழ்க்கமான ஒன்று தான் என தனியார் வானியல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார். வழக்கமாக தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு மேற்கு திசையிலிருந்து தான் காற்று வீசும். இந்த காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும். மேலும் பகல் நேரங்களில் அதிகப்படியான வெயிலின் காரணமாக மாலை நேரத்தில் மேகக்கூட்டங்கள் தோன்றி இடி மின்னல் உருவாகி கனமழை பெய்வதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்கு கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும். தற்போது வரை தென்மேற்கு பருவ மழை முடிவடையாத நிலையில் தெற்கு திசை காற்று வீசி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை காலை நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் இது தொடர்பாக பேசுகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் இயல்பான ஒன்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நல்ல வெயில் இருந்த நிலை மாலை அப்படியே வானிலை தலைகீழாக மாறியது. சூறைக்காற்றுடன் இடி மின்னல்கூடிய கனமழை பெய்து வந்தது. தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், கிண்டி, அடையாறு என நகரின் அனேக பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும் இன்று காலை முதல் நல்ல வெயில் உள்ள நிலையில் மாலையில் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டிற்கு பின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மழை அளவீடு இந்த ஆண்டு முறியடித்துள்ளது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் 877 மிமீ மழை பதிவாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டு இந்த அளவு 871 ஆக இருந்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை அளவு கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)