மேலும் அறிய

கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்.. சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

கொடைக்கானல் மலை அடிவார சோதனைச் சாவடி மற்றும் மலைச் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் பத்து காவலர்கள் கொண்ட தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை செய்யப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல் மலை அடிவார சோதனைச் சாவடி மற்றும் மலைச் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை செய்யப்பட்டது. இப்பதிவில் சந்தேகப்படும் படியாக கொடைக்கானலுக்கு சென்று பாதி வழியிலேயே திரும்பி வந்த சைலோ கார் எண் TN18F300  வாகனம் சம்பந்தமான விசாரணை மேற்கொண்டனர். இந்த வாகனத்தின் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார் நம்பர் விபரங்கள் குறித்து விசாரித்ததில், 


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

கார் நம்பர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தது என கண்டறிந்து ,தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை காவல் துறையினரை  தொடர்பு கொண்டு கார் நம்பரை கொடுத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர், காரின் உரிமையாளர் ஜெகனை(34) விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதிலளித்தும்,கொடைக்கானல் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலிசாரின் தீவிர விசாரணை செய்ததில்  ஜெகன் தனது பெற்றோர் உதவியுடன் தனது அண்ணன் செல்லத்துரை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

புகாரின் மீது சந்தேகம் அடைந்த தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை விரைந்து ஜெகன் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்தனர்.  இந்த விசாரணையில் கொடைக்கானல் செல்லும் வழியில் கிடந்த சடலம்  கொலை செய்யப்பட்டு இறந்தவர் செல்லத்துரை(37) என்பதும், இவர் ஜெகனின் அண்ணன் என்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டு இறந்த செல்லத்துரை மன நலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது.  போதை பழக்கத்திற்கும் அடிமையாகி வீட்டில் உள்ளவர்களை அதிகம் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து  சென்ற ஜெகனும் தாயார் ராஜம்மாளும்  செல்லத்துரையை கொன்று விட்டு கொடைக்கானல் மலை பகுதிகளில் வீசி வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

கடந்த 6ஆம் தேதி  செல்லத்துரைக்கு தாயார் ராஜம்மாளும் ஜெகனும் மது வாங்கி கொடுத்து அதிக போதை ஏறிய நிலையில் சுயநினைவு இழந்தவுடன் தந்தை திவ்யாநாதன்(75) உதவியுடன் ஜெகன் வைத்திருந்த சைலோ காரில் ஏற்றி வந்து காரின் பின் இருக்கையின்  உள்ளே இருந்த இரும்பு ராடின் மூலம் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக அடித்து கொலை செய்து, செல்லத்துரையின் இரண்டு கைகளை கட்டி கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தள்ளிவிட்டு கற்களை செல்லத்துரை முகம் மற்றும் உடல் மீது வீசி சிதைத்து விட்டு அதே சைலோ காரில் புதுக்கோட்டை பகுதிக்கு திரும்பி  சென்றது விசாரணையில் தெரியவந்தது.


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய இறந்த செல்லத்துரையின் தாய், தந்தை, தம்பி ஆகிய மூன்று நபர்களை தனிப்படையினர் திருமயத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் சைலோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு நான்கு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.