மேலும் அறிய

Thiruvannamalai: வள்ளுவன் வாக்கு போல ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு ஏற்றார் போல மனிதநேயத்துடன் ஆட்சி நடத்துபவர் தமிழக முதல்வர் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் புதியதாக ரூபாய் 23 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

நலத்திட்ட பணிகள்:

அதனைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி இரண்டாண்டு சாட்சி என்ற தலைப்பில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை வேளாண்மை துறை சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் 6779 பயனாளிகளுக்கு 15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Thiruvannamalai: வள்ளுவன் வாக்கு போல ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

முன்னதாக பயனாளிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் எ.வ.வேலு, "எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான். அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த ஆட்சியைப் பாராட்டி பேசி உள்ளார்கள் என்றால் அதுதான் திமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமை. முதலமைச்சருக்கே கிடைத்துள்ள பெருமை.

பாசிட்டிவ், நெகட்டிவ் அதிகாரிகள்:

எந்த ஆட்சி வந்தாலும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எந்தெந்த முரண்பாடு வரும், என்ன ஏற்பாடுகள் வரும் என்று பல அதிகாரிகள் நினைப்பார்கள். இவர்கள் நெகட்டிவ் அதிகாரிகள். ஆனால், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எப்படியாவது அரசு திட்டங்களையும் மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற 100 விழுக்காடு சில அதிகாரிகள் முயற்சி எடுப்பார்கள். இவர்கள் பாசிட்டிவ் அதிகாரிகள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பாசிட்டிவ் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதனால், திருவண்ணாமலை மாவட்டம் பலவகையில் பயனடைந்து வருகிறது.

 


Thiruvannamalai: வள்ளுவன் வாக்கு போல ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

 

வள்ளுவன் வாக்கு போல ஆட்சி:

அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிநாடு தமிழர் வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு வீடு கட்டித் தர இடம் ஒதுக்கித் தருகிறேன் என்று கூறினேன்.

எனது கோரிக்கையை ஏற்று, மறுநாளே இன்று இடத்தைப் பார்க்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்துள்ளார். இதைத்தான் கிராமத்திலே சொல்வார்கள் 'கையிலே காசு, வாயிலே தோசை' என்ற வகையில் இந்த ஆட்சியில் திட்டங்கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்குவதும், நிலை உணர்ந்து கருணை காட்டுவதும், நடுநிலைத் தவறாது திராவிட மாடல் ஆட்சி நடத்துவதும், மக்களைப் பேணி காப்பதும் ஒரு அரசுக்கு அழகு என்ற வள்ளுவன் வாக்கை போல் திராவிடம் மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு வருபவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

 


Thiruvannamalai: வள்ளுவன் வாக்கு போல ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

ஏழை - பணக்காரன், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி, ஓட்டு போட்டவன் - ஓட்டு போடாதவன் என்று பாகுபாடு பாராமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் மனிதநேயம் கொண்ட முதலமைச்சராக ஸ்டாலின் திராவிட ஆட்சியை நடத்தி வருகின்றார். திராவிட நாடு ஆட்சி என்பது பெரியார், அண்ணா, கலைஞர் இந்த மூன்று பேரும் என்ன சிந்தித்தார்களோ அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம். அதிலும் நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் என பத்திரிகைகள் சொல்கின்றன.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் வரலாறு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழர்களின் வரலாறு என நாட்டுக்கு எடுத்துக்காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின்" என உரையாற்றினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget