![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அதிகாரிகள் விளக்கம் என்ன?
சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
![சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அதிகாரிகள் விளக்கம் என்ன? The Metro Rail Administration has denied that the landslide that occurred in Lloyds Road area of Chennai not metro work சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அதிகாரிகள் விளக்கம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/90a1eeee74e07132cdba007c4ee091a01677053988525589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதால் அங்கிருந்த ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறியதாக தெரிவிக்கின்றனர். இந்த நில அதிர்வு பல கட்டிடங்கள் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ பணி காரணமா?
மேலும் அந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதாகவும் இதனால் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பல இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அதிர்வு ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பொறுப்பு இல்லை என்றும் அந்த பகுதியில் மெட்ரோ பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணாசாலை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி விழும் பள்ளம்:
அண்ணாசாலை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் போது அடிக்கடி சாலையில் பள்ளம் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டு அண்ணாசாலை சர்ச் பார்க் கான்வெண்ட் பள்ளி அருகே சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்ட்து. அந்த பள்ளத்தில் மாநகர பேருந்தும், காரும் விழுந்து விபத்துக்குள்ளானது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)