மேலும் அறிய

"பத்திரப்பதிவு அலுவலகத்தினுள் அனுமதியின்றி வந்தால் ஆவண எழுத்தாளரின் உரிமம் ரத்து செய்யப்படும்" -அமைச்சர் மூர்த்தி

இடைத்தரகர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பத்திரப்பதிவு துறை நெறிமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார். 

இதைதொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் வெளிப்படையாக செயல்படுவதற்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஊழலை தடுக்கவும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆவணம் எழுதுவோர், இடைத்தரகர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பத்திரப்பதிவு துறை நெறிமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டு கண்காணிப்பை உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் ஆவணஎழுத்தர், இடைத்தரகர்கள் அமரக்கூடாது இது கண்டறியப்பட்டால் ஆவண எழுத்தரின் உரிமம் ரத்து செய்யப்படும், சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கண்காணிக்க தவறிய சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைமை அலுவலகமான ஐஜி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழலை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக தற்போது 3.0 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவு துறை மேம்படுத்தப்படும்” என்றார்.

இதை தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தவர், கடந்த ஆட்சியில் வீரமணி அமைச்சராக இருந்தபோது, அதிகளவில் ஊழல் நடைபெற்றது. ஆனால் எந்த மண்டலத்திலும் ஆய்வு நடத்தவில்லை, எந்த அலுவலகத்திற்கும் சென்று கண்காணிக்கவில்லை, கடந்த ஆட்சியில் தான் அதிகளவில் போலிபத்திரங்கள் பதிவானது. அதனை கண்டறிந்து, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவு பெற்று அதனை சரிசெய்து தரும்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2000 பேருக்கு சரி செய்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்கு பணம் கொண்டு வர அவசியமில்லை, இணையதளம் மூலமாகவே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்திர பதிவுத்துறையில் ஊழலை தடுக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு பத்திரபதிவு மூலமாக பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு நிலையில் தற்போது 17384 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி சாதனை” என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget