மேலும் அறிய

Arakkonam: அரக்கோணம்: சந்தேகப்பட்ட மனைவி: விசாரணையில் விஷம் குடித்த கணவன் உயிரிழப்பு..!

அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையின் போது விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையின் போது விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஜோதிப்புரத்தை சேர்ந்தவர் தளபதி (32). கூலித்தொழிலாளியான இவரது மனைவி வீனா காயத்ரி. இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தளபதிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் வீட்டிற்கு வருவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வீனா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.


Arakkonam: அரக்கோணம்: சந்தேகப்பட்ட மனைவி: விசாரணையில் விஷம் குடித்த கணவன் உயிரிழப்பு..!

ஒரு கட்டத்தில் இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.  இந்தநிலையில், அரக்கோணம் காவல்துறை சார்பில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் புகார் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு விசாரணைக்கு வரும் படி போலீசார் தளபதியை அழைத்தனர்.

இதனால் அவமானமடைந்த அவர் தனியார் திருமண மணடபத்திற்கு வந்த போது, திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அரக்கோணம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதுரையில் மூன்றாவதாக திருமணம் செய்த பெண்ணை கொன்று எரித்த கணவரும் அவரது குடும்பத்தாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி பொட்டப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் கடந்த 29ம் தேதி இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில் கொலை செய்து எரிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் குட்டுபட்டி அருகே பஞ்சயம்பட்டியை சேர்த்த ராசாத்தி (19) என தெரிய வந்தது.  மேலும் நடத்தப்பட்ட விசாரணையில்,  அதே ஊரைச் சேர்ந்த கணவர் அர்ச்சுணன் (25), மாமனார் ராசு (50), மாமியார் அரியம்மாள் (48), உறவினர்கள் வல்லான் என்ற ரவி (42), சிவலிங்கம் (39) ஆகியோர் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

மூன்றாவது திருமணம் 

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,  நத்தம் பஞ்சயம் பட்டியை சேர்ந்த அர்ச்சுணன் முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 10 நாட்களில்  பிரிந்து விட்டார்.  இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி, அவரையும் அவர் பிரிந்து விட்டார். 

இந்த நிலையில் மூன்றாவதாக ராசாத்தியை காதலித்து வந்த அர்ச்சுணன் அவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ, ராசாத்தியை அர்ச்சுணன் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு ராசாத்தி மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் தான் வேலை பார்த்த இடத்திற்கே அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு ராசாத்தி வேறு சில ஆண்களுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கிராமத்திற்குச் செல்லலாம் என கடந்த ஜூன் 28  ல் மனைவியை ஊருக்கு அழைத்து வந்துள்ளார் அர்ச்சுணன். 

கொன்று எரித்த குடும்பம் 

கொட்டாம் பட்டி பள்ளப்பட்டி அருகே இரவில் பஸ்ஸை விட்டு இறங்கிய போது, அர்ச்சுணனின் பெற்றோர் அங்கு காத்திருந்தனர். பஸ்ஸை விட்டு இறங்கியதுமே குழந்தையை அவரது தாய் அரியம்மாள் வாங்கி கொண்டார். தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றபோது, திடீரென அர்ச்சுணன் மற்றும் மாமனார் ராசாத்தியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை தீ வைத்து எரித்தனர்.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்த போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த ராசாத்தியின் புகைப்படங்களை வெளியிட்டு அடையாளம் தெரிந்தவர்கள் கூறலாம் என கூறியிருந்தனர். இதனையடுத்து ராசாத்தியின் பெற்றோர் அவர் அணிந்திருந்த தாலியை வைத்து அடையாளம் கூற, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கொட்டாம் பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget