26 ஆண்டுகளாக தலைமறைவு.. 7 வெடிகுண்டு வழக்குகள்.. சிக்கிய முக்கிய தீவிரவாதி.. காத்திருந்து பிடித்த தமிழக காவல்துறை
தீவிரவாதத் தடுப்புப் படையினர், அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மூப்பது ஆண்டுக்கு முன்னர் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களிலும், மத ரீதியான கொலைகளிலும் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதிகள் இருவர் ஆந்திர மாநிலத்தில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத் தடுப்புப் படையினர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
1995 ஆம் நடந்த சம்பவம்:
1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி. தனிப்படையினரால் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்முவடிப்பு வழக்கு 1999-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 07 இடங்களில் (சென்னை, திருச்சி கோலை, கேரளா குண்டுகள் வைத்த வழக்கு 2011 மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012 வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013 பெங்களூர் பிஜேரி அலுவலகம் முன் குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி தமிழ்நாடு காவல் துறையின் தனிப்படையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவர் கைது:
அவரோடு 26 வருடங்களாக தலைமறைவாக இருந்த 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 07 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கின் குற்றவாளி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி (எ) பூனுஸ் (எ) மன்சூர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01.07.2025) இருவரும் சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளதோடு, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதை கண்டறிவதற்காக காவல் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.






















