மேலும் அறிய

கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..

மறைந்த நடிகர் விவேக் நினைவாக ஓவிய ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 16-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் மறுநாள்  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்தனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள், கையில் மரக்கன்றுகள் ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
மறைந்த நடிகர் விவேக், அப்துல்கலாமின் பசுமை கனவை நிறைவேற்ற தொடர்ந்து ஆகச்சிறந்த பணிகளை செய்து வந்தார். அவரின் இறப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போதும் அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..
 
கள்ளக்குறிச்சி  மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம்  மறைந்த நடிகர் விவேக்  நினைவாக வாயில்  வண்ணங்களை கொண்டு கொப்பளித்து மரத்தின் படத்தை வரைந்தார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அஞ்சலி செய்தார். இந்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இது குறித்து ஓவியர் செல்வம் நம்மிடம்....," ஓவிய ஆசிரியராக பணியாற்றும் எனக்கு சமூக அக்கறையும் உள்ளது. அதனால் என்னுடைய ஓவியங்களை கருவியாக பயன்படுத்தி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறேன். தாடியில் அப்துல்கலாம், நாற்றில் பாரதி, சாக்பீசில் அம்பேத்கர் என தலைவர்களின் உருவகங்களில் ஓவியமாக மாற்றியுள்ளேன். சோப்பில் படம் வரைதல், பாட்டிலில் படம் வரைதல் நாணயங்களை பயன்படுத்தி படம் வரைதல், மணல் சிற்பங்கள் என பலவற்றில் ஓவியம் செய்துள்ளேன்.

கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..
 
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்பதை தெரிவிக்கும் வகையில் முட்டிபோட்டு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு வழிமுறை என்பதை உள்ளங்கையில் வரைந்து சாதனை செய்துள்ளேன்.  கலாம் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட், சோழன் உலக சாதனை என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். தற்போது சின்ன கலைவாணர் விவேக் மறைவு மிகவும் வருத்தமடைய செய்தது. எனவே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மரங்கள் நடவேண்டும் என்ற நோக்கதிலும் பச்சை நிற கேசரி பவுடர், மற்றும் காஃபி தூள் பயன்படுத்தி கலவையாக என்னுடைய வாயில் எடுத்துக்கொண்டு அதனை உமிழ்ந்து மரம் ஓவியம் ஒன்றை வரைந்தேன். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் மரம் வளர்க்க ஆரம்பித்துவிட்டால் கலாம், விவேக் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியதாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.
 

கேசரி பவுடர், காஃபி தூள்.. வாயால் மரம் வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ஓவியர்..
 
மேலும் மரம் வளர்ப்பு தொடர்பாக அப்துல்கலாமின் அண்ணனின் பேரன் சேக் சலீம் நம்மிடம்...," ஒரிசாவில் உள்ள வீலர் ஐ லேண்டில் 1995-ல் தாத்தா கலாம் முயற்சியால் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்பு அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ராஸ்ட்ரிய பவனில் மூலிகை தோட்டம் வைத்தது முக்கியமான செயல்.  120 கோடி மக்கள் 120 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது தாத்தாக கலாமின் மிகப்பெரும் பசுமை திட்டமாகும். தொடர்ந்து நடிகர் விவேக்கிடம் மரம் வளர்ப்பு தொடர்பாக பேசி மரக்கன்று நட கேட்டுக்கொண்டார்.
 
அதனை உறுதி மொழியாக எடுத்துக்கொண்ட விவேக்  1 கோடி மரங்களை நட முயற்களை மேற்கொண்டார். ஒரு  முறை கடலூரில் 10 லட்சம் மரங்களை நடுவதற்கு கலாம் ஐயாவை அழைத்து நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டுவைத்து பெரும் புரட்சி செய்தார். தற்போது அவரின் இறப்பு ஈடு செய்யமுடியாது. நடிகர் விவேக் விதைக்கப்பட்டுள்ளார். இன்னும் பல கோடி மரங்களாக வளர்ந்து நம்மோடு இருப்பார். மரங்கள் நடுவதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் வரவேற்கப்பட வேண்டும்" என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Embed widget