Rain: மக்களே அலர்ட்!.. இன்று இரவு 24 மாவட்டங்களில் மழை இருக்கு!
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 24 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 11, 2025
Also Read:வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி?
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்து நிலையில், ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலயில், அடுத்த 7 தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் வலுவிழந்தது.மேலும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து 13-04-2025 முதல் 17-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் 'காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை நிலவரம்:
தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ( 11-04-2025 மற்றும் 12-04-2025 ) ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் வரும் 15-04-2025 நாளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் 100 இடங்களுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 101.3 ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரத்தில்101.48 பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்ட்டும், தஞ்சாவூரில்100.4 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில்102.38 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

