வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று இரவு கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இரவு கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், திருச்சி, கடலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை:
சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையானது, ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் 10 வருடங்களுக்கு பிறகு அதிக அளவு பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார். சென்னையில் இன்று சில இடங்களில் 10 செ.மீ அளவு மழை அளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி 10 செ.மீ பெய்தது, சென்னையில் அதிகபட்சமாகும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா
தமிழ்நாட்டில் ஏழு தினங்களுக்கான வானிலை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: இந்தியாவின் சோதனை வெற்றி: விமானங்களை அழிக்கும் லேசர் ஆயுதம்!





















