மேலும் அறிய

மகாவீர் நிர்வானா... மகாவீர் ஜெயந்தியா... இறைச்சிக்கு எழுந்த சர்ச்சை! டாஸ்மாக் தப்பியது எப்படி?

இதுவரை தமிழ்நாட்டில் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகள் அடைக்கப்படுவது வழக்கம்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் பண்டிகை நாளை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த முறை தீபாவளி பண்டிகையை மக்கள் யாரும் பெரியளவில் கொண்டாடவில்லை. இம்முறை கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் தீபாவளியை சற்று விமர்சையாக கொண்டாட மக்கள் ஆவலுடன் உள்ளனர். 

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபாவளி பண்டிகை அன்று மகாவீர் நிர்வான் சேர்ந்து வருகிறது என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை மாநாகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், “சென்னை பெருநகர மாநாகராட்சிக்கு உட்பட்டு இயங்கும் இறைச்சி கடைகள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வானை முன்னிட்டு இறைச்சி விற்க கூடாது. மேலும் இந்த உத்தரவை அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் பல் பொருள் அங்காடிகள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மகாவீர் நிர்வானா... மகாவீர் ஜெயந்தியா... இறைச்சிக்கு எழுந்த சர்ச்சை! டாஸ்மாக் தப்பியது எப்படி?

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் மற்றொரு அரசாணை வெளியானது. அதில், “ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நிர்வான் தமிழ்நாட்டில் இறைச்சி கடைகள் அடைக்கப்படுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இம்முறை தீபாவளி மற்றும் மகாவீரர் நிர்வான் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கை மற்றும் பொதுமக்களின் உணர்வை மதிக்கும் வகையில் தீபாவளி நாளன்று தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி இல்லை” என்று கூறியிருந்தது. 

ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் இந்த அரசாணையில் மகாவீரர் நிர்வான் நாளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இறைச்சி கடைகளை போல் மது கடைகளுக்கு ஏன் எந்த விதமான கட்டுபாடுகள் விதிக்கப்படவில்லை. என்ற கேள்வி எழுகிறது. இந்தாண்டு மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை வந்தது. அந்த நாளன்று இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தது.


மகாவீர் நிர்வானா... மகாவீர் ஜெயந்தியா... இறைச்சிக்கு எழுந்த சர்ச்சை! டாஸ்மாக் தப்பியது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி அன்று மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். அப்படி இருக்கும் போது இம்முறை மது கடைகளுக்கு ஏன் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த இரண்டு அரசாணைகளும் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சிலர் மதுக்கடைகளுக்கு ஒரு நடைமுறை இறைச்சி கடைகளுக்கு ஒரு நடைமுறையா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget