![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Corruption Case: வீராவேசமாக கிளம்பிச்சென்று காற்றுபோன பலூனாக திரும்ப வருகிறார் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த பொதுப்பணித்துறையிலும், இவரது ஒப்புதலின்பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்ததாக புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
![Corruption Case: வீராவேசமாக கிளம்பிச்சென்று காற்றுபோன பலூனாக திரும்ப வருகிறார் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின் tamilnadu cm mk stalin Confident Edappadi Palaniswami accused of corruption case Corruption Case: வீராவேசமாக கிளம்பிச்சென்று காற்றுபோன பலூனாக திரும்ப வருகிறார் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/02/c9409286ac845de6a56d58455c5d22321683002913340109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த பொதுப்பணித்துறையிலும், இவரது ஒப்புதலின் பேரில் நடைபெற்ற கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்ததாக புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சிஏஜி அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், உங்களின் முதல்வர் பதில்களில் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் எடப்பாடி பழனிசாமி ஊழல் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதில், “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?” என கேள்வி கேட்கப்பட்டது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், “ அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும் இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து. கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி!” என தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம், “ டெல்லிக்குப் சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது? “ என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே!” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)