மேலும் அறிய

சென்னைக்கு அடுத்த புயலா? - தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அவசர விளக்கம்

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் சென்னையை தாக்க மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் சென்னையை தாக்க மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மிக்ஜாம் புயலால் சென்னையே தலைகீழாக மாறியுள்ளது. அதன் பாதிப்பு மக்களின் வாழ்வாதாரங்களை நிலைகுலைய செய்துள்ளது. எங்கும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது. மீட்பு பணிகளை அரசு முன்னெடுத்தாலும் அனைவருக்கும் அது போதுமானதாக இன்னும் மாறவில்லை. 

பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழைநீர் வடியாததால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். நிலைமை சீரடைய கொஞ்சம் கொஞ்சமாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. 

தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவ சூர்யா, கார்த்தி, விஜய், பார்த்திபன் போன்ற சினிமா பிரபலங்களும் முன் வந்துள்ளனர். 

மிக்ஜாம் அடித்த புயல் காரணமாக ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு மத்திய அரசிடம் ரூ.5, 060 கோடி இழப்பீடு தொகை கேட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். இவ்வாறு மிக்ஜாம் புயலில் இருந்து மீளாமல் சென்னை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தாக்க மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது என்று மேலும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதைப்பார்த்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். 10 ஆம் தேதி அரபிக் கடலில் சில வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழ்த்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து சென்று விடும். இதனால் சென்னைக்கு ஆபத்து இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget