மேலும் அறிய
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
போக்குவரத்துப் புரட்சி: தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள். ரயில்வேயுடன், மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து மேற்கொள்ளும் சிறப்புப் பணி.

ரயில்வே கேட்
Source : whatsapp
தமிழகத்தில் 29 ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள், நிலுவையில் உள்ளன. 33 ரயில்வே மேம்பாலங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, நிலம் கைய கப்படுத்துதல் உட்பட, பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
33 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு
இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு சேவைகளை கொண்டு வந்துகொண்டிருக்கிறது. காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் சேவைகளும் அதிகரித்துள்ளது. பயணிகளின் சிரமங்களை குறைக்கவும், ரயில்வேதுறையின் வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சிறப்பு நிதிகள் ஒதுக்கி முக்கிய ரயில்நிலையங்களை மேம்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தென்னக ரயில்வே பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. தென்மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், விருதுநகர் போன்ற இடங்கள் சிறப்புமிக்கதாக மாறி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 33 இடங்களில், ரயில்வே கடவுப்பாதைகளை நீக்கி, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்க, மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்கும் பணி
இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்..," ரயில் பாதைகளை பயணியர், வாகன ஓட்டிகள் வாகனங்களில்கடந்து செல்வதைதடுக்க, ரயில்வே கடவுப்பாதைகளை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்கும் பணியை, ரயில்வேயுடன், மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.
முன்னேறும் மதுரை ரயில்வே கோட்டம்
அதே போல் மதுரை கோட்ட ரயில்வே வருமானம் ரூபாய் 490.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.28 சதவீதம் அதிகமாகும். அதேபோல பயணச்சீட்டு வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் 13.34 சதவீதம் அதிகரித்து ரூபாய் 328.57 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து வருமானம் மற்றும் இதர வருமானங்கள் முறையே ரூபாய் 125.44 மற்றும் 11.64 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் மீது அபராதம் விதிப்பது போன்ற இதர பயணிகள் வருமானம் 23 சதவீதம் அதிகரித்து 24.5ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்தில் பயணிகள் ரயில்கள் மூலம் 1.71 கோடி பயணிகள் கையாளப்பட்டுள்ளனர்.
33 ரயில்வே மேம்பாலங்கள்
கடந்த ஏப்ரல் மாதம் நிலவரப்படி, தமிழகத்தில் 29 ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள், நிலுவையில் உள்ளன. 33 ரயில்வே மேம்பாலங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, நிலம் கைய கப்படுத்துதல் உட்பட, பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைவுப்படுத் திட, ரயில்வே மற்றும் பிற துறைகளுடன், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















