"குப்பைக்காடாக மாறிய தமிழகம்.. திமுகவினர் கூனிக்குறுக வேண்டும்" நயினார் நாகேந்திரன் விமர்சனம்
குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

குப்பைகளைப் பெருகவிட்டு, நோய்களின் கூடாரமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு மேடைதோறும் பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அரசு காட்டிய கணக்கு என்ன ஆனது?
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடா வருடம் தூய்மைப் பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது?
"குப்பைக்காடாக மாறிய தமிழ்நாடு"
தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தாய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.
குப்பைகளைப் பெருகவிட்டு, நோய்களின் கூடாரமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு மேடைதோறும் பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச @arivalayam அரசு வெட்கப்பட வேண்டும்! pic.twitter.com/QzyTWV1gMz
— Nainar Nagenthiran (@NainarBJP) July 20, 2025
குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்





















