மேலும் அறிய

உழவர்களுக்கு எப்போது விடியும்? தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை மீட்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திசம்பர் & ஜனவரி மாதங்களில் விதைத்தோ, நடவு நட்டோ ஏப்ரல்   மற்றும் மே மாதங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பிந்தைய இந்தக் காலம் நவரைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. நவரைப் பருவ அறுவடை கடந்த 10 நாள்களாக தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒத்திவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் பெருமளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தண்டராம்பட்டு, மலமஞ்சனூர் புதூர், கரிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால்  ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடங்கின்றன. இந்தப் பகுதியிலும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

காஞ்சிபுரம் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து வட மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான். போதிய சரக்குந்துகள் இல்லாததால் தான்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று கூறும் உணவுத் துறை அதிகாரிகள், இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? உழவர்களுக்கு எப்போது விடியும்? என்பதைக் கூற மறுக்கின்றனர்.

வட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததும், அதனால் கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இன்றி, நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதும் இது முதல்முறையல்ல.  பல ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தமிழக அரசின் நுகர்பொருள் வாரியம்   நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. இந்த தனியார் அமைப்பின் கட்டமைப்புகளை வைத்தே நிலைமையை சமாளித்து வரும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், நெருக்கடியான காலக் கட்டங்களில் வட மாவட்ட உழவர்களை அம்போவென கைவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.800 கோடிக்கும் கூடுதலாக உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்ற பிறகும் உழவர்களிடம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் நல அமைப்புகளும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அந்தத் தொகையை உழவர்களுக்கு தமிழக அரசு பெற்றுக் கொடுத்தது. அப்போதே வட மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை இனியும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், அதே அமைப்பையே நெல் கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை கண்ணீர் சிந்தும் நிலைக்கு எந்த அரசும் அழைத்துச் செல்லக் கூடாது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தமிழக அரசு போக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் இணையத்திற்கு அளிக்கப்படுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
Director Bharathiraja: மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Ultraviolette F77: அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
அடிச்சுத் தூக்கும் அல்ட்ராவயலெட்.! முதல் இந்திய பைக்காக அசத்தல் சாதனை; அது என்ன தெரியுமா.?
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
Embed widget