மேலும் அறிய

உழவர்களுக்கு எப்போது விடியும்? தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை மீட்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திசம்பர் & ஜனவரி மாதங்களில் விதைத்தோ, நடவு நட்டோ ஏப்ரல்   மற்றும் மே மாதங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பிந்தைய இந்தக் காலம் நவரைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. நவரைப் பருவ அறுவடை கடந்த 10 நாள்களாக தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒத்திவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் பெருமளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தண்டராம்பட்டு, மலமஞ்சனூர் புதூர், கரிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால்  ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடங்கின்றன. இந்தப் பகுதியிலும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

காஞ்சிபுரம் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து வட மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான். போதிய சரக்குந்துகள் இல்லாததால் தான்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று கூறும் உணவுத் துறை அதிகாரிகள், இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? உழவர்களுக்கு எப்போது விடியும்? என்பதைக் கூற மறுக்கின்றனர்.

வட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததும், அதனால் கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இன்றி, நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதும் இது முதல்முறையல்ல.  பல ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தமிழக அரசின் நுகர்பொருள் வாரியம்   நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. இந்த தனியார் அமைப்பின் கட்டமைப்புகளை வைத்தே நிலைமையை சமாளித்து வரும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், நெருக்கடியான காலக் கட்டங்களில் வட மாவட்ட உழவர்களை அம்போவென கைவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.800 கோடிக்கும் கூடுதலாக உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்ற பிறகும் உழவர்களிடம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் நல அமைப்புகளும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அந்தத் தொகையை உழவர்களுக்கு தமிழக அரசு பெற்றுக் கொடுத்தது. அப்போதே வட மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை இனியும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், அதே அமைப்பையே நெல் கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை கண்ணீர் சிந்தும் நிலைக்கு எந்த அரசும் அழைத்துச் செல்லக் கூடாது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தமிழக அரசு போக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் இணையத்திற்கு அளிக்கப்படுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

69% இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாசு வலியுறுத்தல்!
69% இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாசு வலியுறுத்தல்!
விழுப்புரத்தில் பரபரப்பு... அதிகாலையில் அறை எடுத்து வாலிபர் தற்கொலை.. கதவை உடைத்துப் பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் பரபரப்பு... அதிகாலையில் அறை எடுத்து வாலிபர் தற்கொலை.. கதவை உடைத்துப் பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் அதிர்ச்சி!
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
Farmers Protest: நெற்றியில் பட்டை நாமம்... கையேந்தி பிச்சை.! முதல்வர் விஜய்க்கு எதிராக விவசாயிகள் நூதன போராட்டம்
நெற்றியில் பட்டை நாமம்... கையேந்தி பிச்சை.! முதல்வர் விஜய்க்கு எதிராக விவசாயிகள் நூதன போராட்டம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
Royal Enfield Bullet 650: இன்னும் கெத்தா, இன்னும் பவரா.! அதே ராயல் லுக்குடன்.! என்ஃபீல்ட் புல்லட் 650 வெளியீடு எப்போ.?
இன்னும் கெத்தா, இன்னும் பவரா.! ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650 வெளியீடு எப்போ.?
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget