Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 15,108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 374 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 280-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வாசிக்க: முதல் தடுப்பூசி 70 சதவீதம் பாதுகாப்பு தரும்; வேலூர் கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் தகவல்!
தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 14 ஆயிரத்து 14 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 23வது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.சென்னையில் இன்று கொரோனாவிற்கு 935 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டும் 267 நபர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுவையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,684 ஆக உயர்ந்துள்ளது.





















