மேலும் அறிய

TN Class 12 Public Exam : ஊரடங்கிற்கு பின் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நல்ல முடிவு; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஊரடங்கு நிறைவடைந்த பிறகு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்த பிறகு, படிப்படியாக கடந்தாண்டு இறுதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடு முழுவதும் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 300ஐ நெருங்கி வருகிறது. கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக செயல்படாத காரணத்தால், மாணவர்களின் கல்வி குறித்து கல்வியாளர்களும், பெற்றோர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும், தற்போது அந்த தேர்வை ஒத்திவைக்கப்படுவதாகவும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.


TN Class 12 Public Exam : ஊரடங்கிற்கு பின் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நல்ல முடிவு; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சியில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,

“ ஆட்சியில் இல்லாத நேரத்தில் எவ்வாறு மக்களுக்கு உதவிகள் செய்தோமோ, அதேபோல் தற்போது ஆட்சியில் உள்ளபோது மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் நோக்கத்திலே தி.மு.க. சார்பில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தீவிரம் அடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தேவையான மருந்து, ஆக்சிஜன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடும்.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அதற்காக மாணவர்கள் அனைவரும்கூட பாராட்டுவார்கள். ஆனால், அது முக்கியமல்ல. அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தால், மாணவர்களை எந்த கல்லூரி சேர்த்துக் கொள்ளும்? தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பதை நீதிமன்றமும், பல்கலைகழகமும் ஏற்காவிட்டால் என்ன செய்ய முடியும்?

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதே முக்கியம். இதனால்தான், மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, எங்களது ஆலோசனைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவரது அறிவுறுத்தலின்படி, ஊரடங்கு முடிந்தபிறகு நல்ல முடிவு எடுக்கப்படும். “ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Embed widget