TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?
Tamil Nadu Assembly: கடவுள் அறிய என்று உறுதிமொழி ஏற்ற மோகன், ’’மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, முதல்முறை வந்திருக்கிறேன் வணக்கம்’’ என்று குலுங்கி அழுதார்.

சட்டப்பேரவையில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ அழுதுகொண்டே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு, பதவி ஏற்றது, காண்போரை நெகிழச் செய்தது.
தமிழ்நாட்டின் 17ஆம் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (மே 11) முதல் முறையாகக் கூடிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று எம்எல்ஏவாகப் பதவியேற்று வருகின்றனர்.
வரிசை முறைப்படி பதவியேற்பு
முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்ற நிலையில், அடுத்ததாக அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனை தொடர்ந்து சட்டசபைக் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா என்ற வரிசைப்படி பதவியேற்றனர்.
அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் சட்டப்பேரவையில் பதவி ஏற்றார்.
குலுங்கி அழுத பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ
அப்போது கடவுள் அறிய என்று உறுதிமொழி ஏற்ற அவர், ’’மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, முதல்முறை வந்திருக்கிறேன் வணக்கம்’’ என்று குலுங்கி அழுதார்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு வணக்கம் வைத்து கையெழுத்து போட்டார். பின்னர் சபைக்கு வணக்கம் வைத்தவர், இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மோகன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















