மேலும் அறிய

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

கடிதம் எழுதி வைத்து மூன்றாம் ஆண்டுகளாக காத்திருந்த மாணவன் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் கடிதத்தை நேரில் வழங்கியதால் வியப்படைந்த முன்னாள் சைலேந்திரபாபு பாராட்டு.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பதில் அளித்தார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் சிறப்பாக சேவை புரிந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

பின்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிநாராயணன் கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக எனக்கு ஐபிஎஸ் ஆக ஆசை இருக்கிறது, உங்களை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சைலேந்திர பாபுவிடம் வழங்கினார். பின்னர் அந்த கடிதத்தில் தன் கைப்பட மாணவன் வழங்கிய கடிதத்தில், உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களின் படைப்பாற்றலை சிறந்த எதிர்காலமாக நான் பாராட்டுகிறேன் என்று  ஆங்கிலத்தில் அவர் கைப்பட எழுதி கடிதத்தை மீண்டும் மாணவனிடம்  வழங்கினார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பொழுது: பள்ளப்பட்டி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பதற்கு தனியாக பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளீர்கள் அதற்கு நான் உதவுவதற்கு தயார் எனவும், 21 வருடமாக ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்கும் நபர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும், நான் டிஜிபியாக இருந்த பொழுது தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டியது என்னுடைய பொறுப்பு எனவும் கூறினார்.


சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பையில், மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விட தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன சார் என்று சிறுவன் கேட்டதற்கு சைலேந்திரபாபு கூறுகையில், தமிழ்நாடு போலீஸ் புலிகள் மாதிரி குற்றங்கள் நடக்க விடமாட்டார்கள் எனவும், ஆன்லைன் குற்றங்களை அதிகம் விசாரித்தால் அந்த தொலைபேசி எண்கள் அசாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் காட்டும், நான் டிஜிபி ஆக இருந்தபோது சைபர் கிரைம் தனி அலுவலகம் வைத்து தீவிரமாக கண்காணித்து போன் கால்களை டிராக் செய்து அவர்கள் வங்கி கணக்கை ஃப்ரீ செய்து விடுவோம் நான் பலமுறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்துள்ளேன் இருந்தாலும் செல்போன்களில் மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது எனவும்,சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்றால் யாரும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வதைவிட நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்,அதேபோன்று சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு விளக்கம் அளித்து பரிசு வழங்கினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget