Swami Omkaranandha Death: பிரபல பீடாதிபதி ஓம்கார நந்தா சுவாமிகள் கொரோனா பாதிப்பால் காலமானார்..
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓம்கார நந்தா சுவாமிகள் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணி அளவில் காலமானார்.
தேனி மாவட்டம் ஶ்ரீ வேதபுரி சித்பவானந்தா ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்யஶ்ரீ ஓம்கார நந்தா சுவாமிகள் கொரோனா தொற்று பாதித்து கடந்த ஒரு வார காலமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் மேல் சிகிச்சைக்காக, அவரை சென்னைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இன்று மதியம் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏர்-ஆம்புலன்ஸ் மூலமாக அவரை சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
ஆனால், அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் அந்த திட்டம் மாற்றப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார், இங்கு தொடர்ந்து வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணி அளவில் காலமானார். அவரது உடல் தேனி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது இந்நிலையில், கொரோனா பாதித்துள்ளதன் காரணமாக அவரது உடலை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது குறித்து ஆஸ்ரம நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் இன்று இரவே அவரது உடலை அடக்கம்செய்ய ஆசிரம நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன, இன்றிரவுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets