மேலும் அறிய

Edappadi Palanisamy Tender Case: எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு.. அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை வருகின்ற அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியினர் வழக்கை எதிர்கொள்வதில்லை என தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்தனர். 

கடந்த 2016- 21ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.4,800 கோடிக்கு டெண்டர்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக எம்பி ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ்க்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்தப் புகாரை வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டும் என்பதற்காக வழக்கை சிபிஐக்கு மாற்றி அக்டோபர் 9, 2018 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2018ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன் பிறகு நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருந்தது.

எதனால் வழக்கு..?

நெடுஞ்சாலை துறை டெண்டர் அனைத்தையும் தனது உறவினர்களுக்கே இபிஎஸ் வழங்கியதாக அந்த புகார் மனுவில் கூறப்படுகிறது. இதில், வண்டலூர்- வாலாஜா சாலையை 6 வழி சாலைகளாக மாற்றப்பட்டதிலும் முறைகேடு நிகழந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரை தொடர்ந்து டெண்டர் முறைகேடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதற் கட்ட விசாரணையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அப்போது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தது. 

 உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் படி வழக்கை மீண்டும் விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்தார்.

இதில் கூறப்பட்ட காரணம் பின் வருமாறு, “

  1. கடந்த 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் எந்த ஒரு குறையும் இல்லை.
  2. வெறுமனே ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை
  3. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படும்

என அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் மீதான ரூ.4.800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மீண்டும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் டெண்டர் புகார் விவகாரத்தில் போதிய வகையில் ஆய்வு எதுவும் செய்யாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளித்தனர். 

இதையடுத்து கடந்த வாரம் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த டெண்டர் முறைகேடானது இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வருகின்ற அக்டோபர் 17ம் தேதி மீண்டும் ஒத்திவைத்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget