மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலினின் கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தலைவருக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியசுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தனு, முருகன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் குற்றவாளிகளாக உள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகின்றன. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மாநில அரசே அவர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று தீ்ர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அந்த தீ்ரமானத்தை கிடப்பில் போட்ட ஆளுநர், மாநிலத்தின் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுதொடர்பாக அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த தி.மு.க. தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால் அவர்கள் விடுதலை குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

குடியரசுத் தலைவரின் இந்த கடிதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும், முதல்வர் கடிதம் எழுதியதற்கும் கண்டனம் தெரிவித்தனர். அதே சமயத்தில், பிற கட்சிகள் அவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தான் எழுதிய கடித்ததில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செயய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் 28 ஆண்டுகளாக உள்ள அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்பிரமணிய சுவாமி இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget