மேலும் அறிய

சேலம் அருகே கல் குவாரி உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை - ஒரு கோடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்

’’ரோந்து பணியின் போது சிக்கிய லாரியில் போலீசார் சோதனை செய்த போது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது’’

தலைவாசல் அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கரூர் கல் குவாரி உரிமையாளர் கடத்தி கொலை செய்யப்பட்டு காரில் தப்பி சென்ற அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு மற்றும் போலீசார் அந்த டிப்பர் லாரியை சந்தேகமடைந்து சோதனை மேற்கொள்ள அருகில் சென்று பார்த்த போது திடீரென அந்த டிப்பர் லாரியின் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் போலீசாரை பார்த்த உடன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்களை ஓடுவதைப் பார்த்த தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு மற்றும் போலீசார் விரட்டிச் சென்றனர். அதில் ஒரு வாலிபர் போலீசாரிடம் சிக்கினார் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.


சேலம் அருகே கல் குவாரி உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை - ஒரு கோடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்

போலீசாரிடம் பிடிபட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம், முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் நவீன் (20) என தெரியவந்தது. இதனையடுத்து நவீனை லாரி நின்ற இடத்துக்கு போலீசார் அழைத்து வந்து லாரியில் சோதனையிட்டனர். அங்கு டிரைவர் சீட்டுக்கு அருகில் தலையில் வெட்டு காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டு முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர். திருப்பூர் மாவட்டம், புதுப்பாளையம் கிழக்கு பகுதியில் வசித்து வந்த சாமிநாதன் (65) என தெரியவந்தது. இவர் கரூர் மாவட்டம் தென்னிலை இப்பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார்.


சேலம் அருகே கல் குவாரி உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை - ஒரு கோடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்

இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு இவரை திருப்பூரில் இருந்து டிப்பர் லாரியில் கடத்திய மர்ம கும்பல் சேலம் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் எதிர்பார்த்த தொகை வந்து சேரவில்லை என்ற விரக்தியில் கரூர் கல் குவாரி உரிமையாளர் சாமிநாதனை கடத்திய கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த கொலையில் நவீன் உட்பட எத்தனை பேர் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


சேலம் அருகே கல் குவாரி உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை - ஒரு கோடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்

இந்த வழக்கு சம்பந்தமாக தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ,சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கல்குவாரி உரிமையாளரை கடத்தி வந்த கும்பல் ஒரு காரில் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கல் குவாரி உரிமையாளர் கடத்தி சென்ற டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


சேலம் அருகே கல் குவாரி உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை - ஒரு கோடி கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்

கரூர் கல் குவாரி உரிமையாளர் சாமிநாதனை ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கிடைக்காத விரக்தியில் சாமிநாதனை கொலை செய்த சம்பவம் கரூர் மற்றும் சேலம் மாவட்ட கல் குவாரி உரிமையாளர்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget