மேலும் அறிய

சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் - மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சமூக விரோத சாதிவெறி சக்திகள் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு:

நெல்லையில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,சமூக விரோத சாதிவெறி சக்திகள் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.

சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைப்போம் - பாலகிருஷ்ணன்:

சாதி மறுப்பு தலைவர்கள்  பிறந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பும் நிலையில் தான் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பாதுகாப்பற்ற நிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்ய எங்களை நாடினால் அவர்களுக்கு பக்கபலமாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அவர்களது திருமணத்தை செய்து வைக்கும். பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தால் கொலை களத்திற்கு அவர்களை அனுப்பி வைப்பதற்கு சமம்.

சமூகத்தின் கடமை - பாலகிருஷ்ணன்:

தமிழகம் முழுவதும் சாதி மறுப்பு திருமணங்களை காதல் திருமணங்களை செய்யும் தம்பதிகளை பாதுகாக்கும் பெரிய கடமை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம் காலம் பின்னாடி உள்ள சாதிய சகதியில் மக்கள் இன்னும் ஊறி உள்ளனர். சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிய அமைப்புகள் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக உள்ளது. சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் இது போன்ற விவகாரத்தை அணைக்க விடாமல் பெரிதாக்கி உள்ளனர்.

மாஞ்சோலை விவகாரம்:

சாதிவெறி அமைப்புகள் மற்றும் கூலிப்படைகளை கட்டுபடுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரை சந்திக்க உள்ளது. அரசு தமிழ்நாடு தேயிலை தோட்ட நிறுவனத்தின் மூலம் மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணமும் - சூறையாடலும்:

முன்னதாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த  மதன்குமார், உதய தாட்சாயினி ஆகிய காதல் ஜோடிக்கு, கடந்த 13ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி, வினோபா நகரில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாவட்டக் குழு அலுவலகத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் உள்ளிட்டோட் அக்கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக, பெண்ணின் தாய், தந்தை, சகோதரன், பந்தல் ராஜா உள்பட 15 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!
Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Embed widget