மேலும் அறிய

Durga Stalin: பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்..! திருவெண்காடு கோயிலில் சாமி தரிசனம்..

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில்  அகோரமூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இங்கு அகோரமூர்த்தி தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பரிகார தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. இங்கு சிவனின் கண்களில் இருந்து 3 தீப்பொறிகள் விழுந்தாகவும் அந்த இடங்கள் சூரியன் தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் , அக்னி தீர்த்தம்  என்ற பெயரில் 3 குளங்களாக அமைந்துள்ளன. மேலும், படைப்பு கடவுளான பிரம்மா தனது மூச்சை அடக்கி இந்த கோயிலில் தியானம் செய்து வருவதாகவும் ஐதீகம் உள்ளது.


Durga Stalin: பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்..! திருவெண்காடு கோயிலில் சாமி தரிசனம்..

இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு நேரத்தில் அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத 3 -வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று இரவு அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதை முன்னிட்டு  காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சுமார் 4 மணி நேரம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Durga Stalin: பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்..! திருவெண்காடு கோயிலில் சாமி தரிசனம்..

இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி  அகோரமூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட பல திமுக கட்சியினர் கலந்து கொண்டனர். முதல்வரின் மனைவி வழிபாட்டிற்காக, திருவெண்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டனர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பூர்வீக வீட்டிற்கு எதிரே இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவை தாண்டி நீடித்த மழை:-

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை லேசாக தொடங்கிய மழை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவும் மழை தொடர்ந்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் இரவு ஏழு மணி தொடங்கி நள்ளிரவை கடந்தும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த மழை தொடர்ந்தால் சம்பா, சாகுபடி பயிர்கள் மீண்டும் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget