Special Train: திருப்பூர், சேலம், மங்களூருக்கு சிறப்பு ரயில்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
Special Train: விஷு பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து திருவனந்தபுரம், போத்தனூர், ஈரோடு, மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படவுள்ளது.

தொடர் விடுமுறை- சிறப்பு ரயில்
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டும், கேரளாவில் விஷு திருவிழாவும் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சிறப்பு ரயில்கள் விடப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் நெல்லை, கோவை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மங்களூர், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஷு திருவிழா காரணமாக அதிகமான பயணிகள் நெரிசலை சமாளிக்க பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில் அறிவிப்புகள்
சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் (06127 / 06128)
06127: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 8 இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.00 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
06128: மங்களூருவில் இருந்து ஏப்ரல் 9 இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூர் – மங்களூரு சிறப்பு ரயில் (06153)
ஏப்ரல் 10 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்று சேரும்.
மங்களூரு – திருவனந்தபுரம் (06041 / 06042)
06041: ஏப்ரல் 11 மாலை 6.00 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
06042: ஏப்ரல் 12 காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 8.45 மணிக்கு மங்களூரு வந்தடையும்.
மங்களூரு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06154)
ஏப்ரல் 15 மாலை 4.00 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அனைத்து ரயில்களிலும் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் சாதாரண வகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு எப்போது.?
சென்னை எழும்பூர் – மங்களூரு (06153) சிறப்பு ரயில் ஏப்ரல் 8 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்களுக்கு ஏப்ரல் 9 காலை முதல் முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























