3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு..
School holidays: தொடர் விடுமுறை நாட்களான வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசுதினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்து துறை

3 நாள் தொடர் விடுமுறை
விடுமுறை என்றால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அதிலும் தொடர் விடுமுறை கிடைத்தால் சுற்றுலாவிற்கும் உறவினர்கள் வீட்டிற்கும் பறந்து விடுவார்கள். அந்த வகையில் இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் சற்று ஓய்வை கொடுக்கும். கடந்த வாரம் தான் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனையடுத்து கடந்த திங்கட் கிழமை தான் மீண்டும் பள்ளிகளுக்கு மாணவர்கள் திரும்பினார்கள். இந்த நிலையில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.
குடியரசு தின கொண்டாட்டம்
நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் விடுமுறையாகும், வருகிற திங்கட்கிழமை குடியரசு தினத்தையொட்டி விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். எனவே வெளியூர் செல்லும் பயணிகளுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23/01/2026 (வெள்ளிக்கிழமை) 24/01/2026 (சனிக்கிழமை) 25/01/2026 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் 26/01/2026 குடியரசுதினம் ஆகிய நாட்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்
இதனையடுத்து பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (23/01/2026 வெள்ளிக் கிழமை) 100 பேருந்துகளும் நாளை (24/01/2026 சனிக்கிழமை) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (23/01/2026 வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், நாளை 24/01/2026 (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்தும் இன்றும் நாளையும் 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணம் செய்யுங்க
இதேபோல பெங்களூர் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாக விடுமுறை முடிந்து சென்னை மற்றும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக வருகிற (26/01/2026) திங்கள் அன்று சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடக்ளுக்கு 250 சிறப்பு பேருந்துகள் 26/01/2026 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. எனவே வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















