மேலும் அறிய

Soorasamharam 2023: சூரபத்மனை முருகப்பெருமான் எப்படி வதம் செய்தார் தெரியுமா? : சூரசம்ஹாரம் புராணக்கதை!

Soorasamharam 2023: நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி திருச்செந்தூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதைக்காண உலகம் முழுவதும் உள்ள முருகப் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குவிவது வழக்கம்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் சஷ்டி ஆகும். கடந்த திங்கள்கிழமை சஷ்டி தொடங்கிய நிலையில், வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது. திருச்செந்தூர் கடலோரத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்வதை காண கோடிக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குவிவது வழக்கம் ஆகும்.

வீரமகேந்திரபுரியின் அரசன் சூரபத்மன்:

சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம். சூரபத்மனுடன் பேச்சுவார்த்தை நடத்த முருகப்பெருமான் வீரபாகுவை தூது அனுப்பினார். ஆனால், வீரபாகுவை சூரபத்மன் சிறைபிடிக்க முயற்சித்தான். வீரபாகு சூரனின் மகன் வச்சிரவாகு, சகத்திரவாகு ஆகியோரை கொன்று திருச்செந்தூர் திரும்பி முருகனிடம் நடந்தவற்றை விளக்கமாக கூறினார்.


Soorasamharam 2023: சூரபத்மனை முருகப்பெருமான் எப்படி வதம் செய்தார் தெரியுமா? : சூரசம்ஹாரம் புராணக்கதை!

பின்னர், சூரபத்மனுடான போரில் முருகப்பெருமான் நேரில் களமிறங்கினார். வீரமகேந்திரபுரியின் அரசனாக திகழ்ந்த அரக்கர்களின் அரக்கனான சூரபத்மன் பல மாபெரும் சக்திகளை கொண்டவன். மாயாஜாலங்களில் கை தேர்ந்தவனான அவன் முருகப்பெருமான் முன் தோன்றி பல அம்புகளைத் தொடுத்தான்.

ஆனால், முருகப்பெருமான் முன்பு அவனது மாயாஜாலங்கள் எதுவுமே வேலை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் பரம்பொருளான பரமசிவனின் மைந்தனுடன்தான் நாம் போர் செய்கிறோம் என்ற உண்மை அறிந்தும் சூரன் ஆணவத்துடன் போர் புரிந்தான். அவனுக்கு முருகன் தேவர்களை விடுவித்துவிடு, உன்னை மன்னிக்கிறேன் என்று அருள்புரிந்தும் ஆணவத்துடன் தொடர்ந்து போர் புரிந்தான்.

இருகூறாய் பிளந்த வேல்:

சூரனின் சேனையை முருகன் வதம் செய்ய, முருகனின் சேனையை அழிக்க முடிவு செய்த சூரன் சிவபெருமான் வரத்தால் தனக்கு கிடைத்த இந்திரஞாலம் எனும் தேரைப் பயன்படுத்தி முருகனின் சேனையை தூக்கிச் செல்ல உத்தரவிட்டான். ஆனால், முருகனின் சேனையை பிரபஞ்ச உச்சிக்கு தூக்கிச் சென்ற இந்திரஞாலத்தை முருகனின் வேல் தடுத்து நிறுத்தி, மீண்டும் முருகனிடம் சேனையை ஒப்படைத்ததுடன் இந்திர ஞாலம் தேரும் முருகன் வசமானது.


Soorasamharam 2023: சூரபத்மனை முருகப்பெருமான் எப்படி வதம் செய்தார் தெரியுமா? : சூரசம்ஹாரம் புராணக்கதை!

சிவபெருமான் வரத்தால் தனக்கு கிடைத்த சூலப்படையையும், அம்புபடையையும் சூரன் அனுப்பினான். ஆனால், முருகப்பெருமானின் வேல் முன்பு அவை செயலிழந்து போனது. அனைத்தையும் இழந்த சூரன் முருகப்பெருமானிடம் இருந்து தப்பிப்பதற்காக அனைத்து இடங்களும் ஓடி ஒளிந்தான். நடுக்கடலில் மரமாக மாறி சூரன் ஒளிந்து கொண்டான். ஆனால், அவன் சென்ற இடமெல்லாம் அவனை துரத்திச் சென்ற முருகப்பெருமானின் வேல் நீரினுள் மாமரமாய் ஒளிந்திருந்த சூரனை இருகூறாய் பிளந்தது.

சூரசம்ஹாரம்:

இருகூறாய் பிளந்த சூரபத்மனின் ஒரு பாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும் முருகன் மாற்றினார். அந்த மயிலே முருகனின் வாகனமாகவும், மற்றொரு பாதி சேவல் முருகன் கொடியிலும் உள்ளது.  வீரமகேந்திரபுரியை ஆண்ட அரக்கன் சூரபத்மனை வதம் செய்து வெற்றித் திருமகனாக முருகப்பெருமான் திருச்செந்தூர் திரும்பினார். இதுவே 6 நாட்கள் சஷ்டியாக தொடங்கி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் செய்த பிறகு, அதற்கு அடுத்த நாள் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.




Soorasamharam 2023: சூரபத்மனை முருகப்பெருமான் எப்படி வதம் செய்தார் தெரியுமா? : சூரசம்ஹாரம் புராணக்கதை!

சூரபத்மன் ஆண்ட வீரமகேந்திரபுரி தற்போது கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், இது இலங்கைக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் ஒரு தீவாக இருந்ததாகவும் புராணங்களில் உள்ளது. நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி திருச்செந்தூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதைக்காண உலகம் முழுவதும் உள்ள முருகப் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குவிவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் இந்த கண்கொள்ளா காட்சி தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
Embed widget